இராணிப்பேட்டையில் மு.க.ஸ்டாலின்:- அமைச்சர்கள் எ.வ.வேலு-ஆர்.காந்தி ஆட்சியர் ஆய்வு!

இராணிப்பேட்டையில் மு.க.ஸ்டாலின்:- அமைச்சர்கள் எ.வ.வேலு-ஆர்.காந்தி ஆட்சியர் ஆய்வு!

 கு.அசோக்,

 இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நாளை மறு தினம் முதல்வர் திறந்து வைக்கவுள்ள நிலையில் அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் ஆர்.காந்தி ஆகியோர் ஆட்சியருடன் ஆய்வு நடத்தினர்.

 வருகின்ற 30 ஆம் தேதி இராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது.

  மேலும் இராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சி மேடையில் தமிழக முதல்வர் பங்கேற்று பல்வேறு துறைகளை சார்ந்த நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கி சிறப்புரை ஆற்றவுள்ளார்.

  இந்நிலையில் தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சருமான எ.வ.வேலு, தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் டி.பாஸ்கர் பாண்டி ஆகியோர் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறக்க உள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க கூடிய நிகழ்ச்சி பந்தல் மேடை ஆகியவற்றினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கொண்டனர்.

 மேலும் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியின் போது அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் முழுமையாக இருக்கவேண்டும் எனவும் பாதுகாப்பு பணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் தெரிவித்தனர்.