டி.எஸ்.பி. உட்பட நான்கு பேர் காத்திருப்பு பட்டியலில் வைப்பு! கள்ளச்சாராய வியாபாரி லாக்கப் டெத் எதிரொலி!

S.பாண்டி,
கள்ளச்சாராய வியாபாரி போலிஸ் கஸ்டடியில் இறந்ததை தொடர்ந்து காவல் துறையைச் சேர்ந்த டிஎஸ்பி உட்பட நான்கு பேர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நடவடிக்கையை வடக்கு மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹா இ.கா.ப. மற்றும் டிஐஜி ஜ.ஆனிவிஜயா இ.கா.ப ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
இது பற்றின விவரம் வருமாறு,
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் இளையாங்கண்ணி அடுத்த தட்டரணை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவரை ஏப்ரல் 26 ஆம் தேதி கைது செய்து, திருவண்ணாமலை சப்-ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார்.
27ம் தேதி தங்கமணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அவர் இறந்தார். சிறையில் அவர் அடித்துக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டிய நிலையில், காவல்துறை குற்றச்சாட்டை மறுத்து அவர் உடல்நலக் குறைவால் இறந்ததாகக் வழக்கம் போல் சொன்னார்கள்.
தொடர்ந்து 28ம் தேதி தங்கமணியின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் தங்கமணியின் மூத்த மகன் திருமூர்த்தியிடம் போலிசார் இரவு முழுவதும் பேச்சுவார்த்தையை நீடித்ததாகவும், அவர்களுக்கு ரூ. 6 லட்சம் வரை கொடுக்கப்பட்டதாகவும், அதற்கு பதிலாக அவர்கள் பிரச்சினை குறித்து அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.
"எங்கள் தந்தை ஏப்ரல் 27 அன்று இறந்தார். நாங்கள் இரவு முழுவதும் தூங்கவில்லை, இரண்டாவது இரவு (ஏப்ரல் 28), ஒரு போலீஸ் குழு எங்கள் வீட்டிற்கு பேச்சுவார்த்தை நடத்த வந்தது. 2 லட்சத்தில் ஆரம்பித்து 6 லட்சமாக உயர்த்தினார்கள்.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு தங்கமணியின் உடலைக் பெற குடும்பத்தினர் எடுத்த முடிவால் காவல்துறையினரின் அவரது வீட்டுக்கு படையெடுத்தனர்.
இந்நிலையில் முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையின் நகல் குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் தங்கமணியை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தினர். இதற்கிடையில், இரண்டு வீடியோக்கள் பரப்பப்படுகின்றன.
இறந்த தங்கமணியின் மகன் திருமூர்த்தி, தனக்கு இரண்டு கோரிக்கைகள் இருப்பதாகக் கூறினார், “எங்கள் தந்தையை அடித்துக் கொன்றது யார் என்பது எங்களுக்குத் தெரிய வேண்டும், மேலும் வழக்குப் பதிவு செய்ய முடியாவிட்டால் அந்த நபரை பணிநீக்கம் செய்ய விரும்புகிறோம்.
இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை அவரது உடலைப் பெற மாட்டோம்'' என்றார்.
இந்த விவகாரம் குறித்து பேசாமல் இருக்க பணம் தருவதாக கூறி அவரை அணுகிய போலீசார், தந்தையின் உடல் அழுகிய நிலையில் இருப்பதாகவும், அப்படி பிடிவாதமாக இருக்க வேண்டாம் என்றும் கூறி அழுத்தம் கொடுக்க முயன்றனர். அப்படி அணுகியவர்களில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் டிஎஸ்பி அண்ணாதுரை ஆகியோரின் பெயரை அவர் சொன்னார்.
மேலும் தந்தை தங்கமணியின் மரணம் குறித்த எந்த விவரமும் தங்களுக்கு அளிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த பிரச்சனை குறித்து முதல்வரின் பார்வைக்கும் சென்றது. “சட்டவிரோத சாராயம் காய்ச்சியதற்காக எனது தந்தை கைது செய்யப்பட்டார் என்று சட்டசபையில் முதல்வர் பேசினார்.
அப்படியிருக்க வேலூர் சரக டிஐஜி ஆனிவிஜயா அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.
தங்கமணியின் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட மதுவிலக்கு குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ராஜன், காலால் காவல் நிலைய ஆய்வாளர் நிர்மலா, கலால் காவல் நிலைய முதல்நிலை காவலர்கள் ஜெயச்சந்திரன் மற்றும் ஜெயக்குமார் ஆகிய 4 பேரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி வடக்கு மண்டல காவல்துறை தலைவர் பிரேம்ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை பட்டியலில் பாதிக்கப்பட்ட தங்கமணியின் மகன் திருமூர்த்தியிடம் பேரம் பேசிய சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் டிஎஸ்பி அண்ணாதுரை ஆகியோரின் பெயர்கள் இடம் பெறவில்லை.