அய்யய்யோ இது தீர்வில்லைங்க!

ஜி.பாலகுரு,
15 வயது சிறுவன் பெட்ரோல் ஊற்றி தனக்க தானே தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பூந்தோட்டம் திருவள்ளூர் நகரை சேர்ந்த வெங்கடேசன் காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையில் காவலராக பணியாற்றி வருகிறார்.அவரது மகன் சஞ்சய் (15) பேரளம் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளியில் சஞ்சய்க்கு எழுத்து பயிற்சி கொடுத்துள்ளதாகச் கூறப்படுகிறது.
இதில் மன அழுத்தம் ஏற்பட்ட சஞ்சய் வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டுமென பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் மேலும் மன அழுத்தத்திற்கு ஆளான சஞ்சய், நேற்று காலை வீட்டின் மாடிக்கு நடை பயிற்சிக்காக செல்வதாக சென்றவர், தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திக்கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் சென்ற போது உடல் கருகிய நிலையில் சஞ்செய் கிடந்துள்ளார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக சிறுவன் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து பேரளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.