மக்கள் பணியை தடுக்கும் கணவன்மார்கள்!

K.கணேசன்,
மக்கள் பணியை தடுக்கும் விதமாக உள்ளாட்சி அமைப்பின் கணவன்மார்கள் செயல்படுவதாக அப்பாவி ஒருவர் புலம்பிக் கொண்டிருக்கிறார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், நிம்மியம்பட்டு ஊராட்சியின் தற்போது பெருப்பேற்றுள்ள தலைவர் திருமதி எழிலரசியின் கணவரான வெங்கடேசன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் பிரீத்தியின் கணவன் பழனி ஆகியோர், அவர்களின் மனைவிகளுக்கு உள்ள அதிகார எல்லைக்குள் தலையிட்டு ஆதிக்கம் செலுத்துவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக திரு.அரவிந்தராஜா என்பவர் அனுமதி பெற்று இ சேவை மையம் நடத்தி வந்தார்.
அதில்,போதிய வருமானம் இல்லை. வாடகை கட்டிடத்தில் பொது சேவை மையத்தினை வநடத்த வழியில்லை.
ஆகவே, குறிப்பிட்ட இடத்தில் மையத்தினை நடத்திட உதவி கேட்ட போது செய்து தருகிறோம் என்று சொல்லி பின்பு நிராகரித்துள்ளனர்.
பின்னர் நெடுஞ்சாலை துறையில் முறையாக அனுமதி பெற்று, அதற்காகன கட்டணத்தை செலுத்தி பங்க்கை நிறுவியிருக்கிறார்.
இருந்தும் மேற்படி நபர்கள் மிரட்டுகின்றனர் என்பது அரவிந்த் ராஜாவின் குற்றச்சாட்டு.
இது சம்மந்தமாக மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட கண்காணிப்பாளர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய குழு தலைவர் ஆகியோரிடம் முறையாக புகார் தெரிவித்தும் கம்மென்று இருக்கிறார்களாம்.
செய்வாங்க செய்வாங்க...!