போதை பொருள் கடத்தலை தடுக்க திண்டுக்கல் என்.ஐ.பி.பகிரத முயற்சி! டிஎஸ்பி தலைமையில் பார்சல் சர்விஸ்காரர்களுக்கு டிப்ஸ்!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,
இன்று 30.04.2022 ம் தேதி கனம் திரு. ஆர்.ரோகித் நாதன் இ.கா.ப.தமிழ்நாடு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அவர்களின் அறிவுறைப்படி திண்டுக்கல் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகத்தில் கே. புகழேந்தி டி.எஸ்.பி., ஆய்வாளர் எ. அனிதா அவர்களின் தலைமையில் ஆன்லைன் , பார்சல் சர்விஸ் மற்றும் கொரியர் அலுவலத்தினருடன் போதைப்பொருள் சம்மந்தமாக விழிப்புனணவு கூட்டம் நடைப்பெற்றது.
இதில் ஜெ. ஆரோக்கிய ஜான் கொரியர் மற்றும் பிரன்ஞ் கொரியர், ஆனந்த ஈஸ்வரன் புளு டார்ட், தேவேந்திரன் ஏபிடி பார்சல் சர்விஸ் வேலுமுருகன், முனியப்பன் புரபஷனல் பார்சல் சர்வில், பாஸ்கரன் கே.பி.என் ஊழியர்கள் கலந்து கொண்டார்கள் . மேற்படியார்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு குறித்து எடுத்துரைக்கப்பட்ட்டது.
அதாவது, சரியான அனுப்புனர் முகவரி இல்லாமலும் தொலைபேசி எண் இல்லாமலும், சரியான பெறுநர் முகவரி இல்லாமலும் தொலைபேசி எண் இல்லாமலும் பார்சல் வந்து இருந்தால் அதை முறையாக விசாரனை செய்ய வேண்டும்.
போதைப்பொருள் சம்மந்தமான குற்றம் நடைபெறலாம் என்று சந்தேகம் வந்தால் உடனே என்.ஐ.பி போலிசார் திண்டுக்கலுக்கு தகவல் அளிக்க வேண்டும்.
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அடிக்கடி பார்சல் வந்தாலோ அல்லது சந்தேகம் படியாக பார்சல் வந்தாலோ அவர்களை முறையாக விசாரனை செய்தும் தக்க பதில் கிடைக்காவில்லை எனில் உடனடியாக என்.ஐ.பி போலிசார் திண்டுக்கலுக்கு தகவல் அளிக்க வேண்டும்.
தங்களுடைய அலுவலகத்திற்கு பார்சல் வந்த பிறகு யாரும் வாங்க வராமல் இருந்தாலும் மற்றும் பார்சல் வந்த நபரை தவிர வேறு ஒருவர் அந்த பார்சலை வாங்க வந்தால் உரியவரிடம் அனுமதி பெற்று வழங்கும் படியும் கூற வேண்டும்.
பார்சல் புக் செய்யும் போது அனுப்புனர் செல் நம்பர் ஆதார் அட்டை நகல் பெறவேண்டும். அதை போன்றே பெருநர் உடைய செல் நம்பரையும் தெளிவாக பதிவு செய்யும் படி கூறி அவற்றை பெற வேண்டும்.
ஜி.எஸ்.டி பில் இல்லாமல் சுயசான்று வைத்து அனுப்பபடும் பார்சல்களை அனுப்புவரது முன்னிலையில் கன்னியமாக சோதனை செய்வது சிறப்பாகும்.
தங்கள் அலுவலகத்தில் முழுவதும் கண்காணிக்கும் படியாக சிசிடிவி கேமரா வைக்கப்பட வேண்டும்.
பார்சல் வந்த பிறகு அதை நேரடியாக முகவரியில் சென்று கொடுக்க வேண்டும் என்று செல் நம்பரை வைத்து பாதிவழியிலேயோ கொடுக்க நேர்ந்தால் அந்த நபரை உறுதி செய்துக்கொண்ட பிறகு பார்சல் வழங்க வேண்டும்.
வேறு ஏதேனும் போதைப்பொருள் சம்மந்தமாக தகவல் ஏதேனும் கிடைக்கப்பெற்றால் உடனடியாக என்.ஐ.பி போலிசார் திண்டுக்கல்லுக்கு தகவல் அளிக்க வேண்டும்.
மேற்படி விவரங்களை திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சப் டீலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தெரிவிக்கும்படி திண்டுக்கல் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி.மு.புகழேந்தி அவர்கள் கேட்டுக் கொண்டார்.