ஆட்சியரின் அதிரடியால் ஏற்பட்ட மாற்றம்!

கு.அசோக்,
ஆட்சியரின் அதிரடியால் மாற்றம் ஏற்பட்ட்டிருக்கிறது. இறைச்சிக்கடை மற்றும் மீன் கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்ததை அடுத்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள இறைச்சிக்கடைகளில் மந்தாரை இலை மற்றும் வாழை இலையில் இறைச்சி வைத்து வாடிக்கையாளர்களுக்கு விற்கபடுகிறது
இராணிப்பேட்டைமாவட்டம்,ராணிப்பேட்டை,ஆற்காடு,சோளிங்கர் அரக்கோணம் ஆகிய இடங்களில் அதிக அளவு கடைகளில் பதுக்கி பிளாஸ்டிக் கவர்கள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்த பறிமுதல் செய்தார்.
இதனை அடுத்து இன்றிலிருந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சி மற்றும் மீன் கடைகளில் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த தடை விதித்தார்.
இதனால் சோளிங்கர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகள் மீன் கடைகளில் வாழை இலை மற்றும் மந்தாரை இலையில் இறைச்சி வைத்து கட்டி விற்பனை செய்யப்பட்டது.
பிளாஸ்டிக்கால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிந்து மாவட்ட ஆட்சியர் இறைச்சிகடைகளில் பிளாஸ்டிக்கிற்கு தடைவிதித்துள்ளது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.