ட்ரோன் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளித்தல்!

கு.அசோக்,
காட்பாடி சேவூரில் ட்ரோன் மூலம் வேளாண் பயிர்களுக்கு மருந்து தெளிப்பது குறித்து நேரடி செயல் விளக்கம் மற்றும் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அதிகாரிகள் மக்களுக்கு வழங்கினார்கள்
நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்ரா மூலம், வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே சேவூர் ஊராட்சியில் ட்ரோன் மூலம் வேளாண் பயிர்களுக்கு மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு நேரடியாக செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.
இதில் விவசாயிகளும் அதிகாரிகளும் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சியில்,மத்திய அரசின் மக்கள் தொடர்பக மண்டல இயக்குனர் காமராஜ்,விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில்திட்ட ஒருங்கிணைப்பாளா ¢திருமுருகன்,மாவட்ட முன்னோடி வங்கி பொது மேலாளர் ஜமால் மொய்தீன் உள்பட பலர் பங்கேற்றனர்.
ட்ரோன் பயன்படுத்துவதின் மூலம்நேரம் மிச்சப்படுத்தப்படும், ஆட்கள் பற்றாக்குறை தீர்க்கப்படும் இதற்கான செலவும் குறைவுயும் மகசூல் அதிகரிக்கப்படும், மண் வளமும் பாதுகாக்கப்படும் என விவசாயிகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
வேளாண்மை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கப்படுவது வரவேற்கத்தக்கது. இனிவரும் காலங்களில் ட்ரோன்மூலம் வேளாண் பயிர்களுக்கு மருந்து தெளிப்போம் என விவசாயிகள் கூறினார்கள் மேலும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சி நடத்தப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.