விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கும் மத்திய அரசு! சாலைஅமைக்க வந்தவர்கள் விரட்டப்பட்டனர்!

விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கும் மத்திய அரசு! சாலைஅமைக்க வந்தவர்கள் விரட்டப்பட்டனர்!

ஜி.கே.சேகரன்,

இராணிப்பேட்டை மாவட்டத்தில் சென்னை -பெங்களூர் விரைவு சாலை பணிகள் இன்று துவங்கிய போது விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கிவிட்டு பணியை துவங்க வேண்டுமென தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு பதட்டம்

 சென்னை முதல் பெங்களூர் வரையில் செல்லும் விரைவு சாலை பணிகள் இன்று காலை துவங்கியது. இராணிப்பேட்டை மாவட்டம்,உளியநல்லூர் என்ற இடத்தில்  இதனை விவசாயிகள் தடுத்து நிறுத்தினார்கள்.

 தங்களுக்கு உரிய இழ[பீட்டை வழங்கிவிட்டு பணியை துவங்க வேண்டுமென தடுத்து நிறுத்தி விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு நிலங்களை பிடுங்கும் மத்திய அரசின் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் எழுப்பியதால் அங்குகுழப்பம் ஏற்பட்டது.

  சென்னை - பெங்களூர் விரைவு சாலை இம்மாவட்டத்தில் பள்ளூர்,திருமால்பூர்,உளிய நல்லூர் நெல்வாய் கண்டிகை,அசநெல்லிகுப்பம்.,பொன்னை வேப்பேரி,மகேந்திரவாடி,கூத்தம்பாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களின் வழியாக ஆந்திர மாநிலத்தினுள் செல்கிறது.

 இந்த விரைவு சாலைக்காக விவசாயிகளின் விளைநிலங்கள் சாலை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

  இதில் சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நிலத்தை இழந்துள்ளனர்.

 இவர்களுக்கு ஒரு செண்டிற்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரையில் பணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  அதிலும் விளைநிலங்களில் உள்ள கிணறுகள் ஆழ்துளை கிணறுகள் பலன் தரும் மரங்கள் போன்றவைகளை கணக்கீடு செய்யவில்லை. நிலத்திற்கும் இன்னும் இழப்பீடு தரவில்லை.

  உளியநல்லூர் சாலை அமைக்க முதற்கட்ட பணியை ஜேசிபியை கொண்டு துவங்கினார்கள் விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் பணி செய்ய கூடாது என ஜேசிபியை முற்றுகையிட்டு பணிகளை தடுத்து நிறுத்தினார்கள்.

 இதனால் அதிகாரிகள் சாலை அமைக்கும் பணியை நிறுத்திவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

 விவசாயிகள் இந்த பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு பதட்டமும் காணப்பட்டது.

 இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் இம்மாவட்டம் வழியாக வேலூர் செல்ல இருப்பதால் விவசாயிகளிடம் பிரச்சணை வேண்டாம் என அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.