சாலை மறியல் செய்த மாணவர்கள்! ஓடோடி வந்த அலுவலர்கள்!

சாலை மறியல் செய்த மாணவர்கள்! ஓடோடி வந்த அலுவலர்கள்!

 குமரேசன்,

 சோளிங்கர் அருகே பள்ளி வாளாகத்தில் தேங்கிய மழை நீரை அகற்றக் கோரி    நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல்  ஈடுபட்டனர்.

 இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த ஆயல் கிராமத்தில் அரசு  ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள மைதானத்தில் மழை நீர் தேங்கியதால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல இயலவில்லை.

 ஆகவே மழைநீரை அகற்ற வேண்டுமென மாணவர்கள் கோரினர். இருந்த போதும் அலுவலர்கள் எவரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

  எனவே சோளிங்கர் பானவரம் சாலையில் மாணவர்கள் மறியல் ஈடுபட்டனர்.

  தகவல் அறிந்த அலுவலர்கள் ஓடோடி வந்தனர்.

  பாணாவரம் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி,  வட்டாட்சியர் வெற்றி குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன் ஆகியோர் மாணவர்களிடம்  நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில்  மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து சென்றனர்.

  தொடர்ந்து வட்டாட்சியர் மழை நீரை வெளியேற்ற வடிகால்வாய்களை ஆய்வு செய்தார்.

 பின்னர் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் கால்வாய் தூர்வாரி மழைநீர் தேங்காமல் தறாகாலிகமாக சீரமைக்கப்பட்டு,விரைவில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

  அப்போது  வருவாய் ஆய்வாளர் சுபாஷிணி மற்றும் ஊராட்சி செயலாளர் சிவக்குமார் உடனிருந்தனர்.