வேலூர் மாநகராட்சியை கண்டித்து திராவிட முஸ்லீம் முன்னேற்றகழகம் ஆர்பாட்டம்!

கு.அசோக்,
ஸ்மார்சிட்டி பணிகள் மற்றும் பாதாளசாக்கடை திட்ட குளறுபடிகளை கண்டித்து வேலூர் நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தப் போலவே, திராவிட முஸ்லீம் முன்னேற்றகழகத்தின் சார்பில் மாநில தலைவர் இக்பால் என்பவரின் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் பாதாள சாக்கடையால் எல்லா இடங்களையும் தோண்டி போட்டுவிட்டு நகர் முழுவதும் சாக்கடை போல் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் நடந்து செல்ல கூட முடியாத நிலை உள்ளது.
பாலாற்றில் தண்ணீர் வெள்ளம் ஓடியும் மாநகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவது கிடையாது.
மேலும் நகரம் முழுவதும் இருளில் மூழ்கி கிடக்கிறது.
ஒதுக்கபடும் நிதிகளில் ஊழல்களும் முறைகேடுகளும் நடக்கிறது.
மழைகாலத்தில் பல்வேறு தொற்று நோய்களும் ஏற்படுகிறது.
எனவே மாநகராட்சியில் நிதிமுறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்தி சுகாதார சீர் கேட்டை சரி செய்யவும் இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் திரளானோர் கலந்துகொண்டு மாநகராட்சியை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
நாளை இந்த மாநகராட்சியின் முறைகேடுகள் குறித்து வேலூர் சுற்றுலா மாளிகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை வைக்கவுள்ளனராம்.