முதல்வரின் முயற்சியால் தனியார் துறைகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் நபர்களுக்கு வேலை கிடைத்துள்ளது! அமைச்சர் எ.வ.வேலு புள்ளிவிவரம்!

ம.பா.கெஜராஜ்,
தமிழ்நாடு முதல்வரின் முயற்சியால் தனியார் துறைகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் நபர்களுக்கு வேலை கிடைத்துள்ளது என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் புள்ளி விவரங்களுடன் பேசினார்.
ஆதியூர் பொதிகை பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்;திய மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் 263 நபர்களுக்கு மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், ஆதியூ£,¢ பொதிகை பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஊரகஃ நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் 263 நபர்களுக்கு மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
இம்முகாமிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்தார். தொடர்ந்து இம்முகாமிற்கு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சி.என்.அண்ணாதுரை அவர்கள், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.க.தேவராஜி அவர்கள், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.நல்லதம்பி அவர்கள், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.செ.வில்வநாதன் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் விழாப் பேருரை ஆற்றி பணிக்கான ஆணைகளை வழங்கி தெரிவித்ததாவது:-
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெரிய அளவில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, பல்வேறு மாவட்டங்களில் இந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் எடுத்துக் கொண்டால் 100 க்கும் பெரிய அளவிலான நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் 16,477 நிறுவனங்கள் பங்கு பெற்றது, அதில் 6,74,962 நபர்கள் பங்கேற்று, 1,18,491 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதிலும் குறிப்பாக 912 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் 1052 சிறிய அளவில் முகங்கள் நடத்தப்பட்டு,12,258 நிறுவனங்கள் பங்கேற்று, 1,43,992 நபர்கள் நேரடியாக கலந்து கொண்டு, அதில் 36,060 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்று இருக்கிறார்கள். அதில் குறிப்பாக 1502 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி கிடைத்திருக்கிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்று வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக 1,50,000 நபர்களுக்கு தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, 09.08.2023 அன்று வரை ஒன்பது வேலைவாய்ப்பு முகங்கள் நடைபெற்றதில் 4,551 பணியிடங்களுக்கு 20,698 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 37 மாற்றுத்திறனாளிகள் என்று சொன்னால் அது மிகை ஆகாது. அந்த வகையில் நமது திருப்பத்தூர் மாவட்டத்தில் சென்ற முறை இதே வளாகத்தில் நடைபெற்றதன் அடிப்படையில், மூன்று பெரிய முகாம் மூலமாக 327 நிறுவனங்கள் பங்கேற்றன,12,425 நபர்கள் பங்கேற்று, 2670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
அதில் குறிப்பாக 27 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பணி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் 46 சிறிய அளவிலான முகாம் மூலமாக நமது மாவட்டத்தில் 304 நிறுவனங்கள் பங்கேற்று, அதில் 6432 நபர்கள் கலந்து கொண்டு, 1751 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் தான் இன்றைய தினம் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பல்வேறு தொழில் நிறுவனங்களின் மூலமாக வேலைவாய்ப்பு அளிப்பதற்காக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதிலே பல தொழிற்சாலைகளுக்கு, தொழில் வல்லுநர்கள் நடத்துகின்ற தொழில் நிறுவனங்களுக்கு வேலைவாய்ப்பு பெறுகின்ற பணியிலே தமிழ்நாடு அரசு ஈடுபட்டிருக்கின்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பட்டதாரிகளுக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தர வேண்டும் என்ற அடிப்படையில் தான் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் இத்திட்டத்தை அரசு பொறுப்பேற்றவுடன் ஆரம்பித்தார்கள்.
அதன் அடிப்படையில் தான் பல்வேறு இடங்களில் தனியார் துறைகளின் மூலமாக படித்த பட்டதாரிகளுக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறுகிறது. படித்து முடித்தவுடன் அரசு வேலைக்கு தான் செல்ல வேண்டும் என்று சொன்னால் அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்க முடியாது. அரசு வேலை என்று சொன்னால் அரசு போடுகின்ற திட்டங்கள் அனைத்தும் மக்களிடத்தில் கொண்டு சென்று நடைமுறைப்படுத்துகின்ற பணியில் தான் அரசு வேலைகள் இருக்கும்.
அரசின் மூலமாக ஒரு ஆண்டிற்கு போடப்படுகின்ற நிதியின் மூலமாக அனைத்து துறைகளும் இயங்குகின்றது. அரசாங்கம் மூலமாக அத்தனை பேருக்கும் வேலைவாய்ப்பு தர முடியாது என்று அரசாங்கம் கருதிய காரணத்தினால் தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனியார் துறைகளை இணைத்துக் கொண்டு அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
இந்த வகையில் தான் தனியார் துறைகளின் மூலமாக ஏறத்தாழ 1 லட்சத்து 50 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனவே இந்த வேலைவாய்ப்பை பெறுகிறவர்கள் தகுதி அடிப்படையில் பணியாற்றினாலும் கூட, அரசு வேலைக்கு அல்லது மேற்படிப்பிற்கு நீங்கள் முயற்சி செய்யலாம். இன்று வேலைவாய்ப்பு பெறுகின்ற நபர்கள் பணிகளை மேற்கொள்கிறவர்கள் எங்கு செல்கிறார்களோ அங்கு திறம்பட திறமையை வெளிப்படுத்துகிற பொழுது உங்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படும். எனவே இன்றைய தினம் வேலைவாய்ப்பு பெறுகின்ற அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் தெரிவித்ததார்கள்.
பின்னர் வேலைவாய்ப்பு முகாமில் 1680 வேலைநாடுனர்கள் கலந்து கொண்டனர். இம் முகாமில் 103 நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான இளைஞர்களை தேர்வு செய்தனர். வேலைவாய்ப்புக்கு தேர்வு பெற்றவர்களில் 183 ஆண்கள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகள், 78 பெண்கள் என ஆக மொத்தம் 263 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்களால் வழங்கப்பட்டது.
இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி, மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் திரு.செல்வராசு, மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு), சேலம் திருமதி.ஆ.லதா, மாவட்ட ஊராட்சி தலைவர் திரு.என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி.த.ரேவதி, அரசு துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.