தெரு நாய்கள் கடித்து எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதி! உடனே பிடிக்க கோரிக்கை!

ர.நி.ஆனந்தன்,
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கோட்டை தெரு பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் எப்போதுமே சுற்றித் திரிந்து கொண்டிருக்கின்றன.
நாய்களை பிடிக்க அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை போயிட்டு வந்து இருப்பினும் நகராட்சி சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் கோட்டை தெரு ஜின்னா ரோடு பகுதியை சேர்ந்த ஆரிப் மகள் கௌசர் ஃபாத்திமா வயது(8) தெருவில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது அங்கு சுற்றித்திரிந்த நாய் கடித்ததில் பலத்த காயம் அடைந்தார்.
பின்னர் பெற்றோர்கள் அவரை மீட்டு முதல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நேற்று மட்டும் அப்பகுதியில் சுமார் 8 நபர்களை தெரு நாய்கள் கடித்து மருத்துவமனையை நாடினர் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.