நெல்லை வாங்கி ஓராண்டாகியும் பணம் வழங்கவில்லை! ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

நெல்லை வாங்கி ஓராண்டாகியும் பணம் வழங்கவில்லை! ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

 கு.அசோக், 

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்த நெல்லுக்கு ஓராண்டாகியும் பணம் வழங்காததை கண்டித்து விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர்.

  இராணிப்பேட்டைமாவட்டம்,ராணிப்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயிலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்டத்தலைவர் கிட்டு தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

 இதில் மாநில செயலாளர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டெல்லிபாபு மாவட்ட செயலாளர் மணி உள்ளிட்ட விவசாயிகள் கலந்துகொண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 கலவை அருகேயுள்ளதோனிமேடு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 36 விவசாயிகளிடம் நேரடி நெல் கொள்முதல் செய்யப்பட்ட 4019 மூட்டைகளுக்கு ஓராண்டாகியும் விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா இன்னும் செய்யவில்லை.

 இதே போல் வெலிம்பி என்ற இடத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் 4 ஆயிரம் மூட்டைக்கு பணம் வழங்கவில்லை ஆக மொத்தம் 8 ஆயிரம் மூட்டை நெல்லுக்கு விவசாயிகளுக்கு பணம் வரவில்லை.

பின்னர் மாவட்ட ஆட்சியர் மற்றும் நுகர் பொருள் வாணிப மேலாளரிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆகவே இன்று விவசாயிகள் கொள்முதல் செய்த 8 ஆயிரம் மூட்டைகளுக்கு பணம் வழங்க கோரி முற்றுகையில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினார்கள்.