கள்ளச்சாராயத்தை அறவே ஒழித்த எஸ்பிக்கு பாராட்டு சான்று! கலெக்டர் வழங்கினார்!!

கள்ளச்சாராயத்தை அறவே ஒழித்த எஸ்பிக்கு பாராட்டு சான்று! கலெக்டர் வழங்கினார்!!

 ம.பா.கெஜராஜ்,

 வேலூர் மாவட்டத்திலுள்ள பேர்னாம்பட்டு சாத்கர் மலை மற்றும் அணைக்கட்டு அல்லேரிமலை ஆகியவைகள் கள்ளச்சாராயத்துக்கு புகழ் பெற்ற கிராமங்கள் ஆகும். அவை  சாம்ராஜ்யம் என்று பெயர் பெற்றதை பலரும் அறிவோம்.

  அதில் குடியாத்தம் சப்டிவிஷனின் முக்கிய போலிஸ் அதிகாரி ஒருத்தருக்கு காசு மணி தான் பிரதானமாம், அவருடைய தயவில் சில கள்ளசாராய உலைகள் நடப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப.அவர்களின் தொடர் நடவடிக்கைக்கு பின்னர் மாவட்டத்தில் எங்கும் கள்ளச்சாராயமே இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

  சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் கருப்பு வெல்லம் குடோன்கள் மற்றும் பீப்பாய்களை கொண்டு செல்லக்கூடிய கழுதைகள் உள்ளிட்டவைகளை தடை செய்ததே கள்ளச்சாராயம் அறவே ஒழிவதற்கு முக்கிய காரணமானது.

  இதனை பாராட்டிய மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் இ.கா.ப.அவர்களை பாராட்டி சான்று வழங்கி கவுரவித்தார். அது சமயம் இந்த நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்ட வேலூர் சரக டி.ஐ.ஜி. திரு.எம்.எஸ். முத்துச்சாமி இ.கா.ப. அவர்கள் உடனிருந்தார்.