தேவாலயங்களில் புனித வெள்ளி!

தேவாலயங்களில் புனித வெள்ளி!

 கு.அசோக்,

 இராணிப்பேட்டை  மாவட்டத்தில் உள்ள பல்வேறு  தேவாலயங்களில் இன்று கிறிஸ்தவர்கள் திருச்சிலுவை தோளில் சுமந்தவாறு புனித வெள்ளி தினத்தை அனுசரித்தினர்.

 இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்த போது அவர் பட்ட பாடுகளையும், சிலுவையில் அறையப்பட்டு உயிர் ஈந்த நாளை புனித வெள்ளி நாளாக அனுசரிக்கப்படுகிறது.

 மேலும் மூன்றாம் நாள் அவர் உயிரோடு எழுந்த நாளை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

 அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம் இராணிப்பேட்டை பாரி தொழிற்சாலைக்கு செல்லும் வழியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பங்கு தந்தை லியோ மரிய ஜோசப் அவர்களின் தலைமையில் சேத்துப்பட்டு புனித லூர்து அன்னை ஆலயத்திற்கு உட்பட்ட மாதா மலை அருட்தந்தை மரிய ஆண்டனி கலந்து கொண்டு சிறப்பு திருச்சிலுவை பாதை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து இயேசு கிறிஸ்து அனுபவித்த திருச்சிலுவை பாடுகள் குறித்து சிறப்பு இறையுரை ஆற்றினார்.

  அதனைத்தொடர்ந்து 14 ஸ்தலங்களில் திருச்சிலுவை பாதை குறித்த தியானத்துடன் கூடிய ஜெப பாடல்ளுடன் சிறப்பு புனித வெள்ளி பிரார்த்தனை நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது.

   இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் முழுவதும் உள்ள காரை அவரைக்காய் கொண்டகுப்பம் , லாலாப்பேட்டை, அம்மூர் வாலாஜாப்பேட்டை அணைக்கட்டு இலங்கை அகதிகள் முகாம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு திருச்சிலுவையை பெண்கள் மற்றும் வயதான முதியவர்கள் தங்களுடைய தோளில் சம்பந்தபடி  ஊர்வலமாக முக்கிய வீதிகளின் இயேசு கிறிஸ்துவ ஜெப பாடல்களை பாடியபடி சென்றனர்.

இதனை தொடர்ந்து புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் அனைத்து கிறிஸ்தவர்களும் இந்த புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை திருச்சிலுவையை முத்தமிடும் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

  இதே போல் நாடெங்கிலும் கடைபிடிக்கப்பட்டது.