தண்ணீர் இருக்கு கரண்ட் இல்லை! விவசாயிகள் வேதனை!

கு.அசோக்,

இராணிப்பேட்டை மாவட்டத்தில் மின் வெட்டால் விவசாயிகள் கடும் பாதிப்பு மும்முனை மின்சாரம் வழங்கபடாததால் மின்சாரம் இல்லாததால் பயிர்கள் காயும் அவலம் மின்வெட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

   இராணிப்பேட்டைமாவட்டம், நெமிலி,சிறுவளையம்,பெருவளையம்,  ,உள்ளிட்ட 20-க்கும் கிராமங்களில் இந்த முறை நீர் வளம் அதிகம் உள்ளதாலும் விவசாயிகளுக்கு அரசின் சார்பில் மும்முணை மின்சாரமும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இதனை நம்பி விவசாயிகள் சித்திரைபட்ட சாகுபடிக்காக 20 ஆயிரம் ஏக்கரில் நெல்லை பயிர் செய்ய திட்டமிட்டு விதைவிதைத்தனர்,சிலர் பயிரும் வைத்தனர்.

 ஆனால் கிணற்றில் நீர் இருந்தும் மும் முனை மின்சாரம் வழங்கபடாததாலும் மின் வெட்டாலும் நீரை பயிர்களுக்கு பாய்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  மேலும்  வேளாண் நிலத்தில் சேடை ஓட்டப்பட்டது தற்போது மின் வெட்டு தொடர்வதாலும் மும்முனை மின்சாரம் இல்லாத காரணத்தினாலும்  விவசாயிகளின் பயிர்கள் காயும் நிலை ஏற்பட்டுள்ளது.

 இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் உடனடியாக தமிழக அரசு மின் வெட்டை சீர் செய்து விவசாயிகளுக்கு மும்முணை மின்சாரம்  தொடர்ந்து   வழங்கி அவர்களின் பயிர்களை பாதுகாக்க வேண்டுமெனவும் விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.