போலி சித்த மருத்துவத்தை கண்டு ஏமாற வேண்டாம்! ஆட்சியர் எச்சரிக்கை!

ஜி.கே.சேகரன்,
வேலூரில் தேசிய சித்த மருத்துவ தினம் மூலிகை கண்காட்சி துவங்கப்பட்டது, சித்த மருத்துவம் கொரோனா காலத்தில் பெரும் உதவியாக இருந்தது - மக்கள் போலியான அங்கிகாரம் இல்லாத சித்த மருத்துவர்களை அனுக வேண்டாம் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேச்சு!
வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில், வேலூர் மாவட்ட சித்த மருத்துவத்துறை மற்றும் புற்று மகரிஷி சேவா மையம் இணைந்து ஆறாவது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு பாரம்பரிய உணவு வகைகள் மூலிகை கண்காட்சி மற்றும் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. அவர்கள் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.
இந்த விழாவில் இம்காப்ஸ் இயக்குநர் பாஸ்கரன், கல்லூரியின் நிர்வாகிகள் ஜனார்த்தனன், ரமேஷ் விழா ஒருங்கிணைப்பாளர் திருமாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதில் 200-க்கும் மேற்பட்ட மூலிகைகள் சித்த மருத்துவ உணவு தானியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில் மக்கள் பாரம்பரிய மூலிகைகள் சித்த மருத்துவ பயன் குறித்து மக்கள் அறிய வேண்டும்.
கொரோனா காலத்தில் சித்த மருத்துவம் மக்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. இன்றைக்கும் கிராமங்களில் இயற்கை சித்த மருத்துவத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால் மக்கள் அங்கிகரிக்கப்பட்ட சித்த மருத்துவர்களை அனுகி சிகிச்சை பெற வேண்டும் போலியான சித்த மருத்துவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என பேசினார்.