மனித நேயத்துடன் பங்கேற்ற வேலூர் ஆட்சியர்!

உ.சசிகுமார்,
வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 18 வயதுக்கு குறைவான மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., தொடங்கி வைத்தார். அப்போது மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு முட நீக்கியல் சிகிச்சை வழங்கப்படுவதை பார்வையிட்டதுடன், சக்கர நாற்காலி, காதொலி கருவிகள் மற்றும் மாற்றுதிறனாளிக்கான அடையாள அட்டையை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் திருமதி.மணிமொழி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.சரவணன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் திரு.மகாலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.