பாலத்தின் உயரத்தை அதிகரிக்கக்கோரி விவசாயிகள் ஆர்பாட்டம்!

பாலத்தின் உயரத்தை அதிகரிக்கக்கோரி விவசாயிகள் ஆர்பாட்டம்!

கு.அசோக்,

சென்னை பெங்களூர் அதிவிரைவு சாலைக்காக அமைக்கபடும் மேம்பாலத்தை 17 அடி உயரமாக அமைக்க கோரி விவசாயிகளின் விளைநிலங்களுக்கு செல்ல அப்போது தான் வழி ஏற்படும் என கிராம மக்கள் போராட்டம். 

  இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த செங்கல் நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தின் வழியாக சென்னை பெங்களூர் அதிவிரைவு சாலை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

  ஓடைப்பகுதி அருகே 6 ஆடி உயர சுரங்கப்பாதை அமைக்க கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த உயரம் குறைவான சுரங்கப்பாதை அமைத்தால் ஓடை அருகே 300 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்திற்கு நெல் அறுவடை இயந்திரம் செல்லவும்  உரங்களை ஏற்றுச் செல்ல டிராக்டர் செல்ல முடியாத நிலையில் ஏற்படும்.

   விவசாயத்தையே நம்பி இருக்கும் கிராமம் பெருமை இழப்பு ஏற்படும் என பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை.

  மேலும் 6 ஆடி உயர  சுரங்கப் பாதையை 17 அடி உயர சுரங்கப்பாதையாக மாற்றியமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

  17 அடி சுரங்கப்பாதை ஏற்படுத்தி தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் சுமார் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.