தன்னம்பிக்கையுடன் படிக்க ஆட்சியர் அறிவுரை!

கு.அசோக்,
மாணவர்கள் ஒவ்வொருவரும் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் படித்து தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்ணை பெற வேண்டும் என சிறப்பு பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையினை துவங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப.அவர்கள் பேச்சு
வேலூர்மாவட்டம்,பிள்ளையார் குப்பத்தில் தனியார் பள்ளி வளாக கட்டிடத்தில் தமிழக அரசின் சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது.
இதில் இன்று 11ஆம் வகுப்பு மாணவர்களின் சேர்க்கையை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.
இந்த விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி மற்றும் அதிகாரிகளும் மாணவ,மாணவிகளு பங்கேற்றனர். இந்த விழாவில் மாணவர்களுக்கு போர்வைகள் மற்றும் தேவையான பொருட்களை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வழங்கி விழாவில் பேசுகையில்,
இங்கு தங்கி படிக்கும் மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் முதல்வன் என்ற எண்ணத்தில் படித்தால் தான் அதிக அளவு மதிப்பெண்களை எடுக்க முடியும்.
மாநில அளவில் முதலிடம் பெறுவேன் என்ற தன்னம்பிக்கையுடன் படிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு பொதுத்தேர்வு உள்ளிட்டவைகளில் அதிக அளவு மதிப்பெண்ணை பெற்று சாதிக்க வேண்டுமென பேசினார்.