அடிப்படை வசதிகள் இல்லவே இல்லை!ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு! மேயர் அதிர்ச்சி!

ஜி.கே.சேகரன்,
சாலைகள் சரியில்லை, குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை தூய்மை பணியும் சரியாக நடக்காததால் தான் மக்கள் பொது இடங்களில் குப்பை கொட்டுகின்றனர் தடை செய்யப்பட்ட போதைபொருட்களால் பள்ளி மாணவர்களும் சீரழிகின்றனர் என ஆளும் கட்சியான திமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி கூட்டத்தில் சரமாரி குற்றச்சாட்டு மேயர் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி
வேலூர்மாவட்டம்,வேலூர் மாநகராட்சி மாமன்ற கூட்டமானது மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் துணை மேயர் சுனில் குமார், மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் மற்றும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் 60 வார்டுகளை சேர்ந்த திமுக,அதிமுக,பாமக,பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பேசிய திமுக மாமன்ற உறுப்பினர் அன்பு சாலைகள் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்களுக்காக தோண்டப்பட்டு குண்டுகுழியுமாக உள்ளது எனவும் தெருவிளக்குகளும் எரியவில்லை நாய்கள் தொல்லை உள்ளதாக குற்றம்சாட்டினார்.
இதே போன்று திமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் சீனிவாசன் பேசுகையில் சாலைகளும் சரியில்லை அதனை சரி செய்ய சொல்லி பலமுறை அதிகாரிகளுக்கு கூறியும் சரி செய்யவில்லை குடிநீர் வசதியும் சரிவர இல்லை என்று பேசினார்.
அதே போல திமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் விமலாவும் தனது வார்டில் தூய்மை சரியாக செய்யபடவில்லை எனவும் குப்பைகளை பொது இடங்களில் மக்கள் கொட்டுகின்றனர் மேலும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தங்கு தடையின்றி பள்ளி மாணவர்கள் அடிமையாகின்றனர் அதனை தடுக்க சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை வைக்க வேண்டுமென பேசினார்.
இதே போல் திமுக மாமன்ற உறுப்பினரும் மண்டல குழுதலைவருமான புஷ்பலதா வன்னியராஜா பேசுகையில் சாலைகள் சரியில்லை ஆங்காங்கே தோண்டிவிட்டு அப்படியே விட்டுவிடுகின்றனர் அதிகாரிகளும் முறையாக பதில் அளிப்பதில்லை குறைகள் சரி செய்வதில்லை என்றார்.
அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை காட்டிலும் ஆளுங்கட்சியான திமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களே அதிக அளவில் குறைகளையும் நிர்வாக மெத்தனத்தையும் சுட்டி காட்டி பேசியதால் மேயரும் மாநகராட்சி அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர்.
மேயர் திமுக வைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது