தமிழ்நாட்டின் பெயரை ஆல்டர் செய்ய சொல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி! கிளப்பினர் புதிய சர்ச்சையை!!

ஜி.சாந்தகுமார்,
தமிழ்நாட்டின் பெயரை மாற்றி வைக்க சொல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சால் சர்ச்சை வெடிக்கும் போலிருக்கு.
தமிழ்நாட்டில் அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஏழாம் பொறுத்தமாக உள்ளது.
நிலவி வருகிறது.
அந்த வகையில் தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ரவி கிடப்பில் போட்டு, பழிவாங்கும் விதமாக செயல்படுவதாக, அரசு குற்றம்சாட்டி வருகிறது.
அதற்கெல்லாம், கவலைப்படாத ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய விதமாக பேசி வருவது, தமிழகம் முழுவதும் எதிர்ப்பை கிளப்பியிருக்கிறது.
இதில் திமுக ஒருபடி மேலே போய் ஆளுநரை திரும்பப் பெற கோரி குடியரசு தலைவர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்கள்
இந்நிலையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் ஏற்பாடுகளை செய்தவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை புகழ்ந்து பேசினார்.
அந்த விழாவில் மேலும் அவர் பேசுகையில்,
பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனையால் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் நிகழ்ச்சி நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. ஒரே பாரதம் தான், அதில் நாம் எல்லோரும் அங்கம்.
அந்த பாரதம் ரிஷிகளாலும் ஆன்மிக இலக்கியங்களாலும் ஆனது என 'செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற் சிந்தை ஒன்றுடையாள்' என்ற பாரதியாரின் பாடலில் இருந்து அறிந்துகொள்ள முடியும்.
இப்பொழுது எல்லாம் பலர் பாரதத்தை பற்றி பேசுவதே கிடையாது. இதில் அவர்களின் குறை ஒன்றும் இல்லை. பாரத் என்பதை உடைப்பதற்கும், அழிப்பதற்கும் பல முயற்சிகள் நடைபெற்றது.
ஆங்கிலேயர்கள் அதை அழிக்க நினைத்தனர். ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த பாடத்திட்டத்தின் கீழ் படித்த பலரும், பெரிய பதவிகளில் இருக்கும் பலரும் இன்றும் காலனி ஆதிக்கம் மனப்பான்மை மற்றும் தாழ்வு மனநிலையில் தான் இருக்கின்றனர்.
ஆங்கிலேயர்கள் இந்த மண்ணை ஆட்சி செய்யாமல் இருந்திருந்தால் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பலர் கல்வி கற்று இருக்க முடியாது என்று, ஒருவர் பேசியதை செய்தித்தாளில் படித்தேன். இவ்வாறு பேசுபவர்களை பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழகத்தில் படைக்கப்பட்டு இருக்கும் இலக்கியங்களும், ஆன்மிகப்படைப்புகளும் பிரம்மிக்க வைக்கிறது. தமிழகத்தில் வித்தியாசமான அரசியல் சூழல் நிலவுகிறது.
நாங்கள் திராவிடர்கள் என சொல்கின்றனர். தமிழ்நாடு என்று கூறுவதை விட 'தமிழகம்' என்று கூறுவதே சரியாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
தமிழுக்கு பின்னால் நாடு என்று வருவதை அகற்றுவதே ஆளுநரது பேச்சின் கருப்பொருளாக பார்க்கப்படுவதால் அவரது பேச்சுக்கு எதிர்பு கிளம்பும் என்று தெரிகிறது.