தமிழாசிரியர்கள் இல்லை:- இதனால் மொழி அறிவு வளர்க்க முடியலை!ஆசிரியர்கள் சங்கம் தீர்மானம்!

தமிழாசிரியர்கள் இல்லை:- இதனால் மொழி அறிவு வளர்க்க முடியலை!ஆசிரியர்கள் சங்கம் தீர்மானம்!

ஜி.கே.சேகரன்,

 தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளில் தமிழாசிரியர்களை நியமிக்க வேண்டும் - வரும் 10 ஆம் தேதி ஜாக்டோஜியோ பேரமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெறும் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் திரளானோர் பங்கேற்பது குறித்து தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுகுழு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

 வேலூர்மாவட்டம்,வேலூர் ஆசிரியர் இல்லத்தில் தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் அவசர பொது குழு  மாநில துணை தலைவர் திருநாவுக்கரசு மாநில பொருளாளர் முருகன் ஆகியோர்கள் கூட்டுத்தலைமையில் நடைபெற்றது.

 இதில் மாநில பொதுசெயலாளர் சேகர் கலந்துகொண்டு பேசினார்,

 இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,

 செப்டம்பர் 10 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள ஜாக்டோஜியோ மாநில அளவிலான வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் தமிழக முதல்வர் கலந்துகொள்கிறார் இதில் திரளானோர் கலந்துகொள்வது எனவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழக அரசு அறிவித்த 3 சதவிகித அகவலைப்படி உயர்வு 1-1-2022 முதல் வழங்க வேண்டும், தொடக்க கல்வியில் நடைமுறையில் உள்ள அரசாணை 101 ,108 ஆகியவைகளை ரத்து செய்ய வேண்டும்.

 பள்ளிகல்வித்துறையில் ஆணையர் பதவியை ரத்து செய்ய வேண்டும், தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளில் தமிழாசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது இதனால் மொழி அறிவு  வளர்க்க முடியாத நிலை உள்ளது.

 எனவே தமிழாசிரியர்களை நியமிக்க வேண்டும் உயர் படிப்பிற்காக ஊக்கத்தொகை நிறுத்தி வைத்துள்ளதை மீண்டும் வழங்கவும் சரண்விடுப்பு சம்பளம் நிறுத்தி வைத்துள்ளதை மீண்டும் வழங்க வேண்டும், ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் 2004-2006 வரையில் தொகுப்பூதிய முறையில் நியமிக்கப்பட்ட இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலைபட்டதாரி ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி பணிகாலத்தை நெறிமுறை செய்ய வேண்டும்.

 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கில் உள்ளனர் அவர்களுக்கு மறு நியமன தேர்வு என்பதை ரத்து செய்யவும் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதை நிரப்ப கோரியும், பள்ளிகளில் மேலாண்மை குழு அமைத்துள்ளதால் பல குளறுபடிகள் நடக்கிறது ஆசிரியர்களை பணி செய்யவிடாமல் தடுக்கின்றனர் எனவே இதனை வரன் முறை படுத்த வேண்டும், கிராம புற பள்ளிகளுக்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என பல கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.

  இதில் திரளான சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்