வேலூர் ராணுவபேட்டை பொங்கலில் பங்கேற்ற ஜெர்மன் நாட்டினர்!

வேலூர் ராணுவபேட்டை பொங்கலில் பங்கேற்ற ஜெர்மன் நாட்டினர்!

ஜி.கே.சேகரன்,

கம்மவான்பேட்டையில்  அதிக ராணுவ வீரர்கள் இந்திய ராணுவத்தில் பணிபுரிவதை அறிந்து ஜெர்மன் நாட்டை சேர்ந்த தம்பதியினர், இக்கிராமத்திற்கு வந்து மக்களுடன் மக்களாக பொங்கலை கொண்டாடினார்கள். 

 வேலூர்மாவட்டம், கணியம்பாடி அருகேயுள்ள ராணுவப்பேட்டை என்றழைக்கபடும் கம்மவான் பேட்டையில், இந்திய ராணுவத்தில் அதிகம் பேர் பணியாற்றுகிறார்கள். இதையறிந்த ஜெர்மன் நாட்டு தம்பதினர் கம்மவான் பேட்டைக்கு வந்து அங்கு இரண்டு நாட்கள் தங்கி பொங்கல் விழாவில் பங்கேற்றனர்.

 அங்கு முன்னாள் ராணுவ வீரர் ஏழுமலை மற்றும் ஊராட்சிமன்ற தலைவர் கவிதா முருகன் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த தம்பதியினரான எலியோ, ஓலிவியா ஆகியோர்  பொங்கல் திருநாளை மக்களுடன் மக்களாக கொண்டாடி கோலப்போட்டியில் பங்கேற்று கோலம் போட்டனர்.

 அத்துடன் பெண்கள் ஆண்கள் இளைஞர்களுக்கு மீயூசிக்கல் சேர் ,சிலம்பம்,கோலப்போட்டி உள்ளிட்டவைகள் நடத்த்தப்பட்டது பாரம்பரிய கலையான சிலம்பம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அனைவருக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டது. வீரம் நிறைந்த மண்ணில் நாட்டுப்பற்றும் அறிந்து இணைய தளம் வழியாக கிராமத்தை கண்டுபிடித்து ஜெர்மனி தம்பதியினர் இங்கு வந்து பொங்கலை கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.