மாலைகூடும் அமைச்சரவை! ஜெ...மரணம் பரபரப்பு அறிக்கை!

ம.பா.கெஜராஜ்,
மாலைகூடும் அமைச்சரவையில் ஜெ...மரணம் பற்றின ஆறுமுக சாமியின் பரபரப்பு அறிக்கை உள்ளிட்டவை முக்கிய இடம் பிடிக்கும் என்று தெரிகிறது.
தமிழக அமைச்சரவை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது. மாலை 6 மணிக்கு நடக்கும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் நலன்சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிறார்கள்.
குறிப்பாக, சென்னையை அடுத்த பரந்தூரில் அமைய உள்ள 2-வது பசுமை விமான நிலைய விவகாரம் முக்கியமான இடத்தை பிடிக்கும் என தெரிகிறது.
மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது.