திருப்பத்தூர் - இராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டில் எஸ்.பி.அலுவலகங்கள் திறப்பு!

திருப்பத்தூர் - இராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டில் எஸ்.பி.அலுவலகங்கள் திறப்பு!

 ம.பா.கெஜராஜ்,

  36 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள மூன்று மாவட்ட காவல் அலுவலக கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு அமைச்சர்கள் திரு ஏ m வ. வேலு திரு துரைமுருகன் மற்றும் முதன்மைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அதிகாரி அமுதா டிஜிபி சி சைலேந்திரபாபு உள்ளிட்ட பல ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்

 திருப்பத்தூரில் 12 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவிலும், ராணிப்பேட்டையில் 12 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவிலும்,  செங்கல்பட்டில் 12 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவிலும், இந்த கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்ட்டிருக்கின்றன.

   இம்மாவட்ட காவல் அலுவலகக் கட்டிடங்கள் தரை மற்றும் 3 தளங்களுடன் சுமார் 4,245 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

   இக்கட்டடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறை, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அறைகள், கட்டுப்பாட்டு அறை, பொதுமக்கள் காத்திருப்பு அறை, உணவருந்தும் கூடம், அலுவலக அறைகள், ரேடியோ ஸ்டேஷன், கூட்டரங்கம், கைரேகை பிரிவு, சைபர் லேப், சி.சி.டி.வி. கேமராக்கள், மின்தூக்கி, மின்னாக்கி, தீயணைப்பு கருவிகள் போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

  மேற்படி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகங்கள்  போதிய வசதிகள் இல்லாத கட்டிடங்களில் இயங்கி வந்தது.   புதியதாக கட்டிடம் கட்ட தமிழக முதல்வர் 2020-ஆம் ஆண்டு உத்தரவிட்டு அதற்கான நிதியை ஒதுக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர்மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஜோலார்பேட்டை  சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்  வில்வநாதன் திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் ஆகியோரும்,

  ராணிபேட்டை மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, ஆகியோர் திறப்பு நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி பணிகளை துவக்கி வைத்தார்.

  இந்த நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் விசேஸ்வரய்யா, உதவி காவல் துறை கண்காணிப்பாளர் கீரஸ் யாதவ், மாவட்ட கோட்டாட்சியர் வினோத்குமார், மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள் காவல் உதவி ஆய்வாளர்கள் என அரசு அதிகாரிகள்  பங்கேற்றனர்.