சாதி மாறி மகன் காதல் கல்யாணம் செய்து கொண்டதால் பெற்றோர் தற்கொலை!

எஸ்.முனிசாமி,
சாதி மாறி மகன் காதல் கல்யாணம் செய்து கொண்டதால் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பெருகோனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி கீதா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில்மூத்த மகன் ரஞ்சித்குமார் வியாபாரம் செய்து வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த எம்.எஸ்சி. பட்டதாரியான தீபிகா என்பவரும் காதலித்து வந்தனர்.
தீபிகா ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். காதலர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் காதலுக்கு இருதரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அதனை ஓரங்கட்டிவிட்டு காதலர்கள் தொடர்ந்து பேசி பழகி வந்தனர். இதனை தொடர்ந்து திருமணம் செய்ய முடிவு செய்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி அப்பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இது குறித்து அறிந்த ரஞ்சித் குமாரின் பெற்றோர் சரவணன், கீதா மனவேதனை அடைந்து அவர்கள் வீட்டில் சரவணன், கீதா ஆகியோர் விஷம் குடித்து மயங்கி விழுந்தனர்.
இதை கவனித்த பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் கணவன், மனைவி 2 பேரையும் மீட்டு மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்க அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சாதி பாகுபாடு காரணமாக அநியாயமாக தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.