இன்ஸ்பெக்டர் குடியிருப்பு அருகில் 24 மணிநேரமும் சரக்கு!

ஜி.கே.சேகரன்,
சோளிங்கர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 24 மணி நேரமும் கள்ள சந்தையில் மது விற்பனை- காவல் நிலையம் அருகே மது விற்பனை கண்டுகொள்ளாத காவல்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 24 மணி நேரமும் கள்ள சந்தையில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் காவல் ஆய்வாளர் குடியிருப்பு அருகேயும், பேருந்து நிலையம், பாணாவரம் கூட்ரோடு உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட இடங்களில் சூப்பர் சேல்ஸ் போய்க்கொண்டிருக்கிறது.
அங்கெல்லாம் 130 ரூபாய் கோட்டர் பாட்டில் விலை 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் சரக்கு கிடைப்பதால் அந்த ரேட்டாம்.
இது குறித்து காவல்துறையிடம் புகார் கொடுத்தும் அவர்கள் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏம்பா பொதுமக்களே. எவ்வளவு செலவு கீது? அதுக்கெல்லாம் எப்புடி துட்டு வருமாம்...போங்கப்பா போய் உங்க பொழைப்பைப் பாருங்க பாவம்.