மாமனாரை போட்டுத் தள்ளிய மருமகன்!

கு.அசோக்,
குடும்ப தகராறு காரணமாக மாமனாரை மருமகன் ஆத்திரமடைந்து தாக்கியதில் மாமனார் பரிதாபமாக உயிரிழப்பு ஆற்காடு போலீசார் மருமகனை கைது செய்தனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த மேல்விஷாரம், அன்சர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 55 வயதான இஸ்மாயில், இவர் வேலுர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் பிரியாணி மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இவருக்கு நான்கு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
அப்படியிருக்க, பெரிய மகளான சபியாவை, ஆட்டோ லோடு ஓட்டுநராக பணிபுரிந்து வரும் ரஹ்மத்துல்லா என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ரஹ்மத்துல்லா மற்றும் மாமனார் இஸ்மாயில் ஆகியோருக்கு நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு ரஹ்மத்துல்லா மற்றும் மாமனார் இஸ்மாயில் ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அதிக அளவில் முற்றி தகராறு ஏற்பட்டு அது கைகலப்பு மாறி பின்னர் ஆத்திரம் அடைந்த ரஹ்மத்துல்லா தனது மாமனார் இஸ்மாயிலை தாக்கி கீழே தள்ளி உள்ளார்.
இதில் நிலை தடுமாறி கிழே விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இருப்பினும் மருத்துவமனையில் இஸ்மாயில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் இந்த சம்பவ குறித்து ஆற்காடு காவல் துறையினர் விசாரித்து மாமனாரை தாக்கிய மருமகன் ரஹ்மத்துல்லாவை பிடித்தனர்.