காலாவதியான சூதாட்ட தடை சட்டம்!கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை :-துரைமுருகன் பேச்சு !!

ம.பா.கெஜராஜ்,
காட்டன், ஒரு நெம்பர் லாட்டரி உள்ளிட்ட பலவகையான சூதாட்டத்தினால் தமிழக மக்கள் தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். ஒரு சிலர் இதில் நஷ்டம் அடைந்து உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.
இதற்காக ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அந்த சட்டம் காலாவதியாகிவிட்டது.
இது பற்றின விவர்ரம் வருமாறு,
ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்து தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றி, கடந்த மாதம் 1-ந் தேதி கவர்னர் அலுவலகத்துக்கு அதை அனுப்பி வைத்தது. கவர்னர் ஆர்.என்.ரவிஅன்றைய தினமே பரிசீலித்து உடனடியாக ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில், தமிழக அரசு, அந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக நிரந்தர சட்டம் கொண்டு வர முடிவு செய்தது. அதன்படி, 'தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2022'-ஐ சட்டசபையில் தாக்கல் செய்து, நிறைவேற்றி, கவர்னரின் ஒப்புதலுக்காக கடந்த மாதம் 28-ந்தேதி தமிழக அரசு அனுப்பி வைத்தது.
அவசரச் சட்டத்தைப் போன்று இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் உடனடி ஒப்புதல் தந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு நிரந்தர தடைச்சட்ட மசோதாவுக்கு கவர்னரின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை.
இதனால் சூதாட்ட எதிர்ப்பாளர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.
குறிப்பு:- தமிழகத்திலுள்ள வேலூர் திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை மையப்படுத்தி லாட்டரி பிசினஸ் அமோகமாக நடந்து வருகிறது.
இதற்கெல்லாம் வேலூர் மற்றும் குடியாத்தத்தில் முதலாளிகள் உள்ளனர். அவர்களிடம் கவனிப்பு நிறைய பெறூவதால் கண்டு கொள்ளப்படவில்லையாம்.
அது சரி,
தமிழக அரசு ஆன் லைன் சூதாட்ட அவசர சட்டம் கொண்டு வந்தது நேற்றுடன் காலவதியானது கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை மசோதாவுக்காவது ஒப்புதல் அளிப்பார் என எதிர்ப்பார்க்கிறோம் முழுமையாக அவர் அரசியல் தான் செய்கிறார் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி -தமிழகத்தில் கடும் நிதி நெருக்கடி உள்ளது இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வருகிறோம் அமைச்சர் துரைமுருகன் பேச்சு
வேலூர்மாவட்டம்,வேலூர் பொன்னை ஆற்றின் குறுக்கே சுமார் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டுமான பணிகள் நடக்கிறது அதனை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
பின்னர் பொன்னையில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார் இக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் தமிழகத்தில் நிதி நிலை கடும் நெருக்கடியில் உள்ள கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் இப்போது தான் பதவி ஏற்ற பின்னர் அதனை சமாளித்து வருகிறோம் விரைவில் தமிழகத்தை நிதி நெருக்கடியிலிருந்து மீட்கும் வரையில் பணிகள் படிப்படியாக தான் நடக்கும் அதுவரையில் கட்சியினர் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென பேசினார் இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஒன்றிய செயலாளர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்
பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழகத்தில் ஆன் லைன் சூதாட்ட தடை சட்டம் நேற்றுடன் காலாவதியானது தற்போது மசோதாவுக்காவது ஆளுநர் ஒப்புதலை அளிப்பார் என எதிர்ப்பார்க்கிறோம் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அதன் பின்னர் எங்களுடைய நிலைப்பாடு என்ன என்பது தெரியும் தமிழக ஆளுநர் முழுக்க முழுக்க அரசியலை தான் செய்கிறார் என்று கூறினார்