சி.எஸ்.ஐ.பேராய அலுவலகம் முற்றுகை:-உள்ளிருப்பு போராட்டத்தால் பரபரப்பு!

ஜி.சாந்தகுமார்,

   ஆந்திர மாநிலம் அரகொண்டா பாஸ்டரேட் பிசி கமிட்டி மற்றும் 18 கிராமத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் வேலூரில் உள்ள சி. எஸ். ஐ.பேராய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

  மேற்படி பேராயத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது அரகொண்டா ஆலயம். அதன் அதிகார எல்லையாக 19 கிராமங்கள் உள்ளன.

இந்நிலையில் ஒரு கிராமத்தினரின் எதிர்ப்பை மற்றும் ஏற்றுக்கொண்டு அங்கு சேர்மனாக இருந்த அருண்குமார் என்பவரை குப்பம் பகுதிக்கு பேராய நீர்வாகம் பணியிடமாற்றம் செய்துவிட்டதாம்.

  இந்த பணியிட மாற்றத்தைக் குறித்து 18 கிராமத்தினருக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்று கோபமடைந்த அப்பகுதி கிறிஸ்தவ பக்தர்கள் இன்று வேலூர் அண்ணா சாலையிலுள்ள சி .எஸ். ஐ. பேராய அலுவலகத்துக்குளு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

 மேலும் நூழைவு வாயிலில் கூடி போராட்டம் நடத்தினார்.

  எங்களது ஊரும், சபைகளும் நல்வழியில் வளர பாடுபடும் ஆயர்ர் அருண் குமார் அவர்களே இங்கு மீண்டும் சேர்மனாக பணியைத் தொடர வேண்டும், ஆலய பணத்தை கையாடல் செய்யும் நபர்களை இங்கு பணியமர்த்த வேண்டாம், ஓர் கிராமத்தை சேர்ந்த ஒருசில நபர்களுக்காக நடவடிக்கை எடுப்பது சரியா? என்று கோஷமிட்டனர்.

 மேலும், 18 சபையினரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பாஸ்டர் அருன்குமார் பணிமாறுதலை திரும்ப பெறவேண்டும் என்று வலியுறுத்தி இன்று பேராய அலுவலகத்தை சூழ்ந்தனர். மேலும் முறையாக நடவடிக்கை எடுக்க விட்டால் எங்கள் போராட்டம் தொடரும் என்று அரகொண்டா பாஸ்டரேட் அங்கத்தினர்கள் சென்றுள்ளனர்.

  குறிப்பு:- ஏற்கனவே மேற்படி பேராய அலுவலகத்தில் நடந்த இரண்டு கவுன்சிலிங் கூட்டத்தின் போது காட்பாடி பகுதியைச் சேர்ந்த ட்டுபாக்கூர் ரவுடிகள் அலுவலகத்தில் ஏகப்பட்ட ரகளை செய்து சீன் போட்டனர், இதற்கு அரசு பணியில் உள்ள சிலரும் (வாத்தியார்கள்) இதற்கு உடந்தை. அதனைத்தொடர்ந்து பேராய நிர்வாகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி அப்படிப்பட்ட ரகளை கோஷ்டிகளை எச்சரித்தது. குற்றம் குறை பற்றி புகார் சொல்கிற போது அதை கேட்டுக் கொள்ள மனமில்லாதவர்களுக்கு தர்னா கோஷம் போன்றவற்றை தவிர வேற வழி தெரியலைங்க அய்யா என்பதே நியாயவான்களின் குரலாக உள்ளது.

  மேலும் இந்த பேராயத்துக்குட்பட்ட தேவாலயங்களில் செயலர் பொருளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் வரவுள்ளது. இதற்காக ரவுடியிஸத்தை கையில் வைத்து அனைத்து திருச்சபைகளையும் தன்வசப்படுத்தப் பார்க்கிறதாம் அதிகாரத்தில் உள்ளவரின் சகோதரர் தரப்பு. இந்த சமாச்சாரத்தால் களேபரம் ஏற்பட வாய்புள்ளதால் உளவுத்துறைதான் அலார்ட்டாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.