தாயை கொன்ற குடிகார EX-போலிஸ்!

தாயை கொன்ற குடிகார EX-போலிஸ்!

கு.அசோக்

  தனக்கு அறிவுரை சொன்ன தாயை பாசக்கார மகன் அடித்தே கொன்றுள்ளான்.  அவன் காவல் துறையில் பணியாற்றி யவனாம்.

  இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வானீஸ்வரி.

 இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.

  இவர்கள் மூவருக்கும் திருமணம் ஆகிய  நிலையில் மூத்த மகனான ராஜேஷ் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இளைய மகன் தினேஷ் காவல்துறையில் பணியில் சேர்ந்து அதிக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி சரிவர பணிக்கு செல்லாத காரணத்தினால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிரந்தர அவரது பணியை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

  அப்படியிருக்க தினேஷீக்கு  திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவன் மது போதையில் தனது மனைவியை கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் தப்பித்த அவரது மனைவி அவரை பிரிந்து   இராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்விட்டார்.

  ஆனால் வானீஸ்வரி தன் இரண்டாவது மகனான தினேஷுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார் 

இந்த நிலையில் நேற்று தினேஷ் அதிக அளவில் மதுகுடித்துவிட்டு தனது தாய் வானீஷ்வரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

 பின்னர் குடிபோதையில் இருந்த தன் மகனுக்கு அறிவுரை கூறிய வாணீஸ்வரி மீது ஆத்திரமடைந்த தினேஷ் தன் தாயை இரவு முழுவதும் கடுமையாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

  தன் தாய் இறந்து விட்டார் என்று அறிந்ததும் கதவை பூட்டி வைத்து காலை முதலே தினேஷ் வீட்டின் அருகாமையில் அமர்ந்து குடித்து வந்துள்ளார்.

  இந்த நிலையில் வாணீஸ்ரியும் அவரது மகளான பிரியாவும் நாள்தோறும் இரவு நேரத்தில் செல்போனில் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் இதன் காரணமாக நேற்று முதல் ப்ரியா தன் தாய்க்கு வழக்கம் போல் செல் போன் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார் ஆனால் அவரது தாய் செல்போன் எடுக்காத காரணத்தினால் சந்தேகமடைந்த அவர் தன் தாயை காண இன்று மதியம் வீட்டிற்கு வந்த போது வீட்டிற்குள் தினேஷ் விடாமல் தடுத்துள்ளார் பிறகு அவரை மீறி வீட்டிற்குள் சென்ற ப்ரியா அவரது தாயின் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் கூச்சலிட்டு கத்தியுள்ளார்..

   இதனைத் தொடர்ந்து அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சத்தம் கேட்டு பிரியாவிடம் வந்தபோது அங்கிருந்த தினேஷ் அங்கு இருந்து தப்பித்து ஓடி உள்ளார்.

  போலீசார் நடந்த சம்பவம் பற்றி பிரியாவிடம் தகவலை கேட்ட பின்னர் போலீசார் தப்பித்து ஓடிய தினேஷை விரட்டி பிடித்து கைது செய்தனர்.

 மேலும் இது தொடர்பாக காவல் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததின் பேரில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரபு  விரைந்து வந்தார்.

 தொடர்ந்து. ஆற்காடு கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் காண்டீபன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னர் போலீசார் தொடர்ந்து இச்சம்பம் குறித்து தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.

 ஆற்காடு அருகே மது போதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்த தன் மகனுக்கு அறிவுரை கூறிய தன் பெற்ற தாயையே கழுத்து நெறித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.