மாணவனை வெயிலில் முட்டி போடவைத்த கேடுகெட்ட ஆசிரியர்!

மாணவனை வெயிலில் முட்டி போடவைத்த கேடுகெட்ட ஆசிரியர்!

உ.சசிக்குமார்,

 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்புவரை சுமார் 1600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு காலையில் நடந்தது.

 ஆகவே மற்ற வகுப்பு மாணவர்கள் மதியம் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டனர்.

 அவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தி சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் செந்துறை மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் அனைவரையும் செந்துறை அரசு தொடக்கப்பள்ளிக்கு வருமாறு ரகுநாத், முனிசாமி, ராஜேந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கூறியிருந்தனர்.

 ஆனால் 10-ம் வகுப்பு மாணவர்களில் ஒருவர் வகுப்புகளுக்கு சரிவர வராமலும், பள்ளிக்கு காலதாமதமாக வந்ததாகவும் தெரிகிறது.

 இதனால் ஆசிரியர் ரகுநாத் அந்த மாணவரை அழைத்து திட்டியதுடன், உச்சி வெயிலில் பள்ளிக்கூட மைதானத்தில் முட்டி போட கட்டாயப்படுத்தி படிக்க கூறியிருக்கிறார்.

 மாணவன் முட்டி போட்டு படித்த போது, வெயில் சூடுதாங்க முடியாமல் கண்ணீர்விட்டு அலறித் துடித்தான். இதை அங்குள்ள சிலர் படம் பிடித்து பரவ விட்டனர்.

 இதை கண்ட மாணவரின் பெற்றோர் மற்றும் சக மாணவர்களின் பெற்றோர்களும் சம்மந்தப்பட்ட ஆசிரியரை வறுத்து எடுத்துவிட்டனர்.