102 மூட்டை குட்கா பறிமுதல்!

 கே.ஏ.ஜெகதீஷ்வரி

  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டு மதுரை சாலையில் வேன் ஒன்று அதி வேகமாக வந்தது. அந்த வாகனத்தில்

குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக தகவல் இருந்தபடியால் டிஜஜி அன்பு அவர்களின் உத்தரவின் பேரில் எஸ். ஐ.கவுஉதம் தலைமையிலான தனிப்படையினர் அந்த வாகனத்தை மடக்கிபிடித்தனர்.

  விசாரித்த போது அந்த வண்டி சேலத்தில் இருந்து வருவதாக தெரிந்தது. சோதனை நடத்திய போது  அதில் சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலையை மறைத்து  கொண்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

  பின்னர் வாகனத்தை பறிமுதல் செய்து டிரைவர்  உள்ளிட்ட இருவரை வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

   இது குறித்து எஸ்.பி.மனோகர், டிஎஸ்பி.ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வளர் ராஜா

துணை ஆய்வாளர் கௌதம் விஜய் , டேவிட் ஸ்டீபன்,மூவேந்தர் ஆகியோரை பாராட்டினர்.