வேலுமணியின் உறவுகாரர் நகை கடை ஏவி.ஆர்.ஸ்வர்ண மகாலில் ரெய்டு!

ஜி.கே.சேகரன்,
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பிவேலுமணிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரைடு நடந்தது.
தமிழகம் முழுவதும், 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்திய நிலையில் மீண்டும் இன்று காலை முதல் இரண்டாவது முறையாக 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோயம்புத்தூரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தகவல் தெரிவித்துக் கொண்டதன் அடிப்படையில் திருப்பத்தூரில், வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ரஜினி தலைமையில் 4 பேர் கொண்ட குழு சோதனை நடத்தினர்.
அதில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் உறவினருக்கு சொந்தமான ஏவி.ஆர்.ஸ்வர்ணமகால் நகை கடையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஏவி.ஆர். ஸ்வர்ண மகால் நகை கடை முன்னாள் மந்திரி எஸ்.பி வேலுமணியின் உறவினருடையதாம்.
எஸ்.பி வேலுமணி க்கு தொடர்புடைய 58 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.