அ.தி.மு.க. எம். எல். ஏ. 'அப்ரூவர்' ஆனாரா? கொடநாடு கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

ம.பா.கெஜராஜ்,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா கொலை வழக்கில், முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி வாக்கு மூலம் அளித்திருக்கிறார். அப்படியிருக்க அவரது வாக்குமூலம், அ.தி.மு.க., முக்கியப் புள்ளிகளுக்கு எதிராக இருப்பதாக கூறப்படுகிறது.
இது பற்றின விவரம் வருமாறு,
முதல்வர் ஜெ.,வுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில், 2017ல் கொலை மற்றும் கொள்ளை நடந்தது.
அ.தி.மு.க., முக்கிய புள்ளிகளின் சொத்து ஆவணங்களைக் கொள்ளையடிக்கவே இந்த கொலை நடந்ததாக புகார்கள் எழுந்தன.இந்த வழக்கில், இதுவரை 260க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவர்களில், முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, பல முறை விசாரிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை தீவிரமடைந்து வந்த நிலையில், அ.தி.மு.க., தலைமையைக் கைப்பற்றுவதில், பழனிசாமிக்கும், பன்னீர் செல்வத்துக்கும் இடையில் மோதல் முற்றி, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை 'சீல்' வைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அப்படியிருக்க, கொடநாடு சம்பவத்தின் பின்னணியில் யார் இருந்தனர், மர்ம மரணங்களை நிகழ்த்தியது யார் என, போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டியின் வாக்குமூலம், மிக முக்கியமானதாக மாறியுள்ளது.
இவை இந்த வழக்கில் பரபரப்பான திருப்பத்தை ஏற்படுத்தவுள்ளது.சம்பவம் நடப்பதற்கு முன், சேலத்தில் அ.தி.மு.க., பிரமுகர் ஒருவரின் வீட்டில் இது தொடர்பாக ஆலோசனை நடந்துள்ளது.அப்போது டிரைவர் கனகராஜிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்த அ.தி.மு.க., பெரும்புள்ளி, அவருக்கு 'அட்வான்ஸ்' ஆக, 5 லட்ச ரூபாயையும் கொடுத்தாராம்.
இந்த சங்கதியை போலீசார் கண்டுபிடித்துவிட்டனராம். ஆகவே கொடநாடு வழக்கில் விரைவில் பரபரப்பான திருப்பங்கள் ஏற்படலாம்.
இது குறித்து எம் .எல் .ஏ. ஆறுக்குட்டி கூறுகையில் ''விரைவில் எல்லா விஷயங்களையும் மீடியாக்களிடம் பகிர்வேன்,'' என்றார்.
ஆறுக்குட்டி வாயை திறந்தால், பட்டம் சூட்டிக் கொண்டவருக்குத்தான் பேராபத்தாம்.
அது சரி,