பஜாஜ் பைனான்ஸ் டார்ச்சரால் நடுரோட்டில் தீயிட்டுக்கொண்ட வெல்டிங்கடைக்காரர்!

பெ.விஜய்,
தேடி தேடி கடன் கொடுக்கிறார்கள், ஓடி ஓடி உயிரை பறிக்கிறார்கள், இது தான் தனியார் பைனான்ஸ்களின் தற்போதைய செயலாக இருந்து வருகிறது.
பஜாஜ் பைனாஸின் டார்ச்சரை தாக்கு பிடிக்க முடியாத வெல்டிங்கடைக்காரர் ஒருவர் நடுரோட்டில் தீயிட்டுக்கொண்டார், பொதுமக்களும், போலிசாரும் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் இறந்து போனார்.
இது பற்றின விவரம் வருமாறு,
திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பகுதி வரகனேரி, தஞ்சாவூர் சாலை மாரியம்மன் திருக்கோயில் அருகே இரும்பு பட்டறை வைத்துள்ளவர் சேகர். இவர் சொந்தமாக வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு பஜாஜ் பைனான்ஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் வீடு கட்டுவதற்காக சுமார் 7 லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.
அப்படியிருக்க ஓராண்டுக்கான தவணைகளை முறையாக செலுத்தி வந்தார். ஆனால் கொரோனா முடக்கம் காரணத்தால் வருமானம் இல்லாததால் கடைசி தவணை செலுத்த இயலவில்லை.
அப்படியிருக்க அவரை, திருச்சி தில்லை நகரில் உள்ள பஜாஜ் பைனான்ஸ் அலுவலகத்திற்கு அழைத்து அங்குள்ள அலுவலர்கள் மிரட்டியிருக்கிறார்கள். ஒழித்துவிடுவதாகவும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்கள்.
இதானல் வெறுப்படைந்த சேகர்¢ திருச்சி நீதிமன்றம் நுழைவாயில் முன்பு கண்டோன்மென்ட் நடு ரோட்டில் தீ வைத்துக் கொண்டார். அதனைப் பார்த்த பொது மக்கள் மண்ணை வாரி தூவியும், தண்ணீர் ஊற்றீயும் சேகரை காப்பாற்ற முயற்சித்தனர்.
போலிசுக்கும் தகவல் தந்தனர். பின்னர் அவரைமீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சேகர் இறந்துவிட்டார்.
இந்த வழக்கு தற்போது திருச்சியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது
இந்த சம்பவம் குறித்து இது குறித்து திருச்சி செசன்ஸ் கோர்ட் நீதிமன்ற காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.