24 மணிநேரமும் டாஸ்மாக் சரக்கு! சங்கடத்தில் மக்கள்!!

ஜி.கே.சேகரன்,
டாஸ்மாக் சரக்கு... அதாங்க, அரசாங்கம் விற்கும் பீர், பிராந்தி போன்ற மதுவகைகளை நன்பகல் 12 மணி முதல் இரவு பத்து மணிவரை தான் விற்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனால் பல இடங்களில் 24 மணிநேரமும் டாஸ்மாக் சரக்கு கிடைப்பதால் குடிமகன்கள் குடித்து கும்மாளம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் சாதாரண மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
குறிப்பாக வேலூர் மாவட்டம், வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே இரண்டு மதுபான பார்கள் இல்லீகலாக செயல்படுகிறது. இதன் மூலம் குடிகாரன்களுக்காக 24 மணி நேரமும் சரக்கு கிடைக்கிறது.
தற்போது காலை 6 மணியிலிருந்து விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும், மார்க்கெட் பகுதிகளுக்கு சென்று வருவதற்கு இப்படிப்பட்ட இல்லீகள் பார்காரர்கள் இடையூறு ஏற்படுத்துவதாகவும் சில இஸ்லாமிய அமைப்புகள் கோபப்படுகின்றன.
கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்பவர் பெயர் வேலு என்பதும், இவர் அப்பகுதியால் ரவுடி போன்று செயல்பட்டு வருகின்றார் எனவும் கூறப்படுகிறது.
இந்த பாதக பணிக்கு மாற்றுத்திறனாளியை முதலாளிகள் உபயோகித்துக் கொள்வதால் என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று சொல்கின்றனர்.
இதில் வேலு என்பவர் பல இடங்களில் இப்படிப்பட்ட இல்லீகல் பார் நடத்திவருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து டாஸ்மாக் அலுவலர்களுக்கும் சரி, வடக்கு காவல் நிலையத்தாருக்கும் சரி தகவல் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்கிறார்கள்.
அதெப்படி எடுப்பாங்க?
இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதி வாணியம்பாடி ஆலங்காயம் சாலையில் பகுதி மக்கள் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது, அதற்கு கள்ள மதுபான விற்பனை தான் அதற்கு காரணம்.
மேற்படி கள்ள மதுபான விற்பனையை தடுக்க கோரியும், சாராய விற்பனை குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கும் இளைஞர்கள் மீது தாக்துதல் நடத்தி வரும் சாராய வியாபாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மறியல் போராட்டம் நிகழ்த்திய தோடு ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதே போன்ற விவகாரம் வேலூரில் தலைதூக்கியுள்ளது வேதனைதான்.