உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவிக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் வரவேற்பு!

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவிக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் வரவேற்பு!

ஜி.பாலகுரு,

  நன்னிலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான இரா.காமராஜ் உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவியை வரவேற்று ஆறுதல் தெரிவித்தார்.

  திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள விஷ்ணுபுரம் பகுதியை சேர்ந்தவர் அபிராமி வைத்தியநாதன். இவர் உக்ரைன் நாட்டில் கார்க்யூ பகுதியில் அமைந்துள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு மருத்துவம் பயின்று வந்தார்.

  இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் போர் ஆரம்பித்து தமிழக மாணவர்கள் உட்பட பல இந்தியர்கள் அங்கு சிக்கித் தவித்தார்கள்  தற்போது, இந்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்து இந்தியர்களை மீட்டு வருகிறது.. 

     அதன்படி, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபிராமி வைத்தியநாதன் தற்போது தம் சொந்த ஊரான விஷ்ணுபுரத்திற்கு திரும்பி உள்ளார்.

    அவரை நேரில் சந்தித்த முன்னாள் உணவுத்துறை அமைச்சர.இரா. காமராஜ் ஆறுதல் கூறினார்.

    அப்போது அவரிடம் அபிராமி வைத்தியநாதன் இங்கே மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என அவரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

  அதன் அடிப்படையில் இது குறித்து அரசுக்கு உரிய அழுத்தம் கொடுப்பதாக காமராஜ் தெரிவித்தார். மேலும் உக்ரைன் நாட்டில் உள்ள நிலவரம் குறித்தும் அங்கு சிக்கியுள்ள மற்ற மாணவர்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

  மாணவி அபிராமியை எல்லாவற்றையும் மறந்து தைரியமாக இருக்கும்படி முன்னாள் அமைச்சர் ஊக்கப்படுத்தினார். மேலும் அபிராமி வைத்தியநாதன்  உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பல தமிழ் மாணவர்கள்  இங்கே மருத்துவம் படிக்க உரிய நடவடிக்கையை உரிய அழுத்தத்தை மத்திய மாநில அரசுக்கு கொடுப்பேன் என்றும் தெரிவித்தார்.   

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.ஆர்.ராஜேந்திரன் திருவாரூர் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எஸ். கலியபெருமாள் உள்ளிட்ட மாவட்ட நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.