நான் சென்னை மேயர் வேட்பாளர்! அ.தி.மு.க.தலைமை சொல்லட்டும்:- முன்னாள் ஐ.ஏ.எஸ். சிவகாமி!

ஆர்.ராஜேஷ்குமார்,
சமூக சமத்துவப்படை கட்சி நிறுவனரும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ப.சிவகாமி நகப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்ததையடுத்து, அவருக்கு சென்னையில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ப.சிவகாமியின் சமூக சமத்துவப் படை அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அதுமட்டுமல்ல, அதிமுகவில் அவருடைய கட்சிக்கு சென்னை மாநகராட்சியில் ஒரு வார்டில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ப.சிவகாமியே போட்டியிடுகிறார்
அந்த வகையில் சென்னை மாநகராட்சியின் 99-வது வார்டில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ப.சிவகாமிக்கு அதிமுக சார்பில் சீட் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வார்டு சென்னை மாநகராட்சியில் அண்ணா நகர் மண்டலத்தில் வருகிறது. விவரம் இவ்வாறு இருக்க சிவகாமி அதிமுக சார்பில், சென்னை மேயர் வேட்பாளர் என்று பில்டப் செய்யப்படுகிறது.
ஆனால் சிவகாமி தான் எங்கள் மேயர் வேட்பாளர் என்பதை அ.தி.மு.க.அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் நான் தான் மேயர் வேட்பாளார் என்பதை அதிமுக மேலிடம் இதை உறுதிப்படுத்த வேண்டும் என்று சிவகாமி பிரஸ் மீட்டில் சொல்லியுள்ளார்.
சென்னை 99 வார்டின் தற்போதைய கவுன்சிலர் வேட்பாளரான சிவகாமி அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்தபோதும் சரி, தற்போது சமத்துவவ மக்கள் கட்சியை நடத்தி வருவதிலும் சரி மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துபவர். அவர் மக்கள் பணிக்காகவே தமது அரசு பணியை துறந்தவர் என்பது நினைவுகூறத்தக்கது.