ஜாக்கெட்டுக்குள் மறைத்த தங்க நகை! திருப்பத்தூர் கிரைம்ஸ்...!

கு.அசோக்,
- நாட்டறம்பள்ளி பகுதியில் நகை மோசடி செய்த சேலம் பகுதியை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர்மாவட்டம்,நாட்டறம்பள்ளி அடுத்த தகரகுப்பம் ஜோதி நகர் பகுதியை சேர்ந்தவர் குட்டி. இவரது மகன் பெருமாள் என்பவர் நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் நகை கடை வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் வழக்கம் போல நேற்று காலை தனது கடை திறந்து நகை வியாபாரம் செய்து கொண்டு இருந்தபொழுது சுமார் 10.30 மணியளவில் சுமார் 36 வயது தக்க பெண் ஒருவர் தனது பழைய நகைகளை கொடுத்துவிட்டு புதியதாக தங்க நகைகள் வாங்க வேண்டும் என கூறினார்.
இதனால் கடையின் உரிமையாளர் பெருமாள் பழைய நகைகளை பெற்றுக் கொண்டு நகைகளை சோதித்து பார்த்துக் கொண்டு இருந்த போது அப்பொழுது தீடிரென அந்த பெண் கடையில் இருந்த இரண்டு சவரன் தங்க நகையை தன் ஜாக்கெட்டில் மறைத்து வைத்ததாகவும் பின்பு போலியான நகை மாற்ற வந்தது தெரிய வந்தது.
இதனால் கடையின் உரிமையாளர் பெருமாள் அந்த பெணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் அளித்த புகாரின் மீது நாட்டறம்பள்ளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
¢ விசாரணையில் அந்த பெண் சேலம் அருகே காந்தி நகர் என்ஜிஓ காலனி கோவிந்தன் மனைவி ராதா என தெரிய வந்தது.
இதனையடுத்து போலிசார் அந்த பெண்ணிடம் இருந்த போலியான ஆதார் அடையாள அட்டை மற்றும் 2 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் போலி நகையை பறிமுதல் செய்தனர் மேலும் கைது செய்யப்பட்ட ராதாவை சிறையில் அடைத்தனர்.
- ஆபாச ஆசாமி!
-
பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்ளும் கஞ்சா ஆசாமி மீது ஊர் பொதுமக்கள் புகார்! நகர போலீசார் விசாரணை.
திருப்பத்தூர் மாவட்டம் ,திருப்பத்தூர் அடுத்த நகராட்சிக்கு உட்பட்ட புதுப்பேட்டை ரோடு 4வது தெரு பகுதியை சேர்ந்த உதயகுமார் மகன் வசந்த். இவர் கஞ்சா போதைக்கு அடிமையானதாக தெரிகிறது.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பக்கத்தில் உள்ள ஒட்டதெரு பகுதி பெண்களிடம் தெருக்களில் நடக்கும் பொழுது இவர் ஆபாசமாகவும் தன்னுடைய உடைகளை கழற்றி நிர்வாணமாக நின்று கொண்டு அவர்களை பல நாட்களாக துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.
அப்படியிருக்க கோபமுற்ற அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் நகர காவல்நிலையத்தில் வசந்த் மீது புகார் அளித்தனர்¢.
புகாரை பெற்றுக் கொண்ட நகர போலீசார் வசந்த் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.