பென்ஷன் தருவதாக ஏழைகளிடம் பணம் மோசடி! தில்லாங்கடி பெண்கள் மீது எஸ்.பி.யிடம் புகார்!

ஜி.கே.சேகரன்,
தொண்டு நிறுவனம் மூலம் நிலம் தருவதாகவும் ஒரு தொகைவைப்பு தொகையாக கட்டினால் மாதாந்திர ஓய்வூதியம் தருவதாகவும் கூறி தனியார் தொண்டு நிறுவனம் பெண்களிடம் பல லட்சம் மோசடி பாதிக்கப்பட்ட பெண்கள் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்
வேலூர்மாவட்டம், கல்புதூர் பகுதியில் புனித அன்னை தெரசா தொண்டு நிறுவனம் என்ற பெயரில் தனியார் தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது.
இதன் நிறுவனர் விஜயாபானு மற்றும் செயலாளர் ஜெயபிரதா ஆகியோர் ஒரு தொகையை தொண்டு நிறுவனத்திற்கு பெண்கள் அளித்தால் ரூ.20 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையில் அளிக்கும் நபர்களுக்கு நிலம் வழங்குவதாகவும், மேலும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரையில் வைப்பு தொகை கட்டினால் மாதாந்திரமாக ரூ.ஆயிரம் ஓய்வூதியம் அளிப்பதாக நூதன முறையில் பெண்களை ஏமாற்றியுள்ளனர்.
இதனை நம்பி காட்பாடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுகணக்கான பெண்கள் பணம் கட்டியிருக்கிறார்கள். இதன் மூலம் பல லட்சம் பணம் வசூல் செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் விஜயாபானு சொன்னதை போல் நிலமும் வழங்காமல், பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளார்.
பணத்தை கேட்டால் மிரட்டல் விடுத்தி பெண்களை திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தங்களின் பணத்தை ஏமாற்றிய விஜயாபானு மீது சட்டபடியான நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தருமாறு மனு அளித்தனர்.