9.50 லட்சம் மதிப்பில் நீர்வரத்து கால்வாய் பணி! ஆட்சியர் ஆய்வு!

   மதன்,

பெருமுகை பிள்ளையார் குப்பம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 9.50 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் நீர்வரத்து துறை கால்வாய் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாணிட்யன் இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டார்.

     அப்போது ஆர்.டி.ஓ. செல்வி விஷ்ணுபிரியா, அரசு அலுவலர்கள் ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

   அதே போல் ஆட்சியர் அவர்கள் சின்ன அல்லாபுரத்திலுள்ள ஊராட்சி துவக்க பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தினை துவக்கினார். அப்போது சி.இ.ஓ.முனிசாமி உடனிருந்தார்.