குப்பைகளை அள்ளி....கழிவுநீர் கால்வாயை சீர்படுத்தி...அமர்களப்படுத்தும் அ.தி.மு.க. வேட்பாளர்!
மதன்,
மாநகராட்சி பகுதிகளில் பல மாதங்களாக தேங்கியுள்ள குப்பைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றாமல் மெத்தனம் - தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர் அவரே சொந்த செலவில் தெருக்களுக்கு சென்று குப்பைகளை அகற்றியதால் மக்கள் மகிழ்ச்சி
வேலூர்மாவட்டம்,வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட சத்துவாச்சாரி 26 வது வார்டு பகுதிகளில் பல மாதங்களாக குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தது.
இதற்குவிடிவு காலமே இல்லையா என மக்கள் வேதனையடைந்தனர்.
இந்நிலையில் வேலூர் மாநகராட்சி தேர்தலில் 26 வது வார்டு வேட்பாளராக போட்டியிடும் ஜி.கே.முரளிக்குமார், இவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர் மற்றும் சமூக சேவகர் ஆவார்.
இந்நிலையில், அவர் அவரது சொந்த வார்டில் உள்ள குப்பைகளை அகற்றி கழிவுநீர்கால்வாய் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்.
அதற்காக ஆட்கள் மற்றும் வாகனங்களுடன் சென்று தெருதெருவாக உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தினார்.
ஆனால் இந்த வார்டு என்னுடையது என்று பந்தா காட்டும் நபர் (எதிர் வேட்பாளார்) அந்த பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை.
இது குறித்து 26 வது வார்டு மக்கள் சிலர் கூறுகையில் ஏற்கனவே இங்கு பதவியில் இருந்த ஆளு ஜெயிச்ச பிறகு இந்த பக்கமே வந்தது கிடையாது. வார்டிலுள்ள ஒருத்தருக்கும் அந்த ஆளுடைய போன் நெம்பர் கொடுத்தது கிடையாது. அவர் சார்ந்துள்ள கட்சியினரே அவருக்கு எதிராக உள்ளனர். தாதா போல செயல்படும் அவரை நாங்கள் இந்த முறை புறக்கணிக்கப்போகிறோம்.
அதே நேரத்தில் தற்போது போட்டியிடும் முரளிக்குமார் மக்களுடன் இணைந்து பல பணியாற்றக்கூடியவர்.
கொரோனா காலத்தில் அவர் வீடு வீடாக கபசுர நீர் கொடுத்தது மற்றும் சேனிடைசர் அளித்த விஷயம் எல்லாம் பாராட்டத்தக்கது.
ஆகவே முரளி அவர்களை இம்முறை வெற்றி பெற வைக்க வார்டு மக்களே பணியாற்ற உள்ளோம் என்கிறார்கள்.
நல்ல விஷயம் தானே.