நீட் எழுதி இறந்த மாணவியின் வீட்டில் துரைமுருகன்! நான் இருக்கேன் பயப்படாதீங்க என ஆறுதல்!
ஜி.கே.சேகரன்.
நீட் தேர்வு எழுதிய மாணவி, ரிசல்ட் அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இறந்த மாணவி சௌந்தர்யாவின் வீட்டிற்கு நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று ஆறுதலை கூறினார்.
வேலூர் மாவட்டம். காட்பாடி தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, ருக்மணி மகள் சௌந்தர்யா(17) நீட் தேர்வு எழுதியிருந்தார்.
இந்நிலையில் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
அவரது இல்லத்திற்கு நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத் ரட்சகன் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் ஆகியோர்கள் நேரில் சென்று மாணவியின் தாய் ருக்மணி மற்றும் தந்தை திருநாவுக்கரசு ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்கள்.
அப்போது அமைச்சரின் காலில் விழுந்து தாய் அழுதது நெஞ்சை பிசைந்தது.
அவரை தேற்றிய அமைச்சர், நான் இருக்கேன் பயப்படாதீங்க என்று சொன்னார்.