மன்னராகும் சார்லஸ்:- ராணியாகிறார் கமிலா !

மன்னராகும் சார்லஸ்:- ராணியாகிறார் கமிலா !

 செட்னி.வில்லியம்ஸ்,

   இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மன்னராக அரியணை ஏறுகிறார். அதன் காரணமாக அவரது மனைவி கமிலா ராணியாகிறார். 

 ராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில் நேற்று உயிரிழந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

  இந்நிலையில், ராணி எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து, இங்கிலாந்தின் இளவரசர் 3-ம் சார்லஸ் மன்னராக அரியணை ஏறியுள்ளார்.

  சார்லஸ் பிலிப் அர்துர் ஜார்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட 3-ம் சார்லஸ் ராணி எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். 73 வயதான சார்லஸ் இங்கிலாந்தின் புதிய ராஜாவாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

   இவர் அரியணை ஏறும் விழா விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2005-ம் ஆண்டு கமிலா என்பவரை சார்லஸ் 2-வது திருமணம் செய்துகொண்டார். இங்கிலாந்தின் புதிய ராஜாவாக சார்லஸ் அரியணை ஏற உள்ள நிலையில் ராணியாக கமிலா அரியணை ஏறுகிறார்.

  இந்நிலையில் ராணி 2- ஆம் எலிசபத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளில் பங்கேற்க உலக தலைவர்கள் இங்கிலாந்தில் குவிகின்றனர்.