குடியிருப்பு பகுதிகளில் புகுந்த ஆற்று வெள்ளம்:-தரைபாலங்கள் தண்ணீரில் மூழ்கின!!

குடியிருப்பு பகுதிகளில் புகுந்த ஆற்று வெள்ளம்:-தரைபாலங்கள் தண்ணீரில் மூழ்கின!!

கு.அசோக்,

   திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் தமிழக ஆந்திர எல்லை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக பாலாறு மற்றும் அதன் கிளை ஆறுகளிலும்  வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 ஆம்பூர் அடுத்த பச்சை குப்பம் பகுதியில் இருந்து மேல்பட்டி மற்றும் 20கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் தரைப்பாலம் கடந்த 10நாட்களுக்கு முன்பு வெள்ளத்தில் மூழ்கியது.

 இதனால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் 15கிலோமீட்டர் தூரம் சுற்றி பயணித்து வருகின்றனர்.

  இந்நிலையில் தற்போது ஆம்பூர் மோட்டு கொல்லை பகுதியில் இருந்து துத்திபட்டு பகுதியை இணைக்கும் தரைபாலமும் தண்ணீரில் மூழ்கியதால் அப்பகுதியிலும் இன்று முதல் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

  மோட்டு கொல்லை  சுண்ணாம்புகாளை பகுதியில் ஆற்றங்கரை ஓரம் தாழ்வான இடங்களில் உள்ள சுமார் 10கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை ஆற்று வெள்ள நீர் சூழ்ந்ததால் குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதே போல எல்.மாங்குப்பம் பகுதியில் உள்ள தரைபாலத்தில் வெள்ளம் அதிகரித்து வரும் நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.  பாலத்தின் மீது அப்பகுதி இளைஞர்கள் சிலர் ஆபத்தை உணராமல் மீன் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.