முன்னாள் அமைச்சர் வீரமணியின் 7 மணல் லாரிகள் ரிலீஸ்!

ஜி.கே.சேகரன்,
முன்னாள் அமைச்சர் கே சி வீரமணிக்கு சொந்தமான7 டிப்பர் லாரிகள் கலெக்டர் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள இடையம்பட்டி காந்தி ரோடு பகுதியில் குடியிருப்பவர் கே.சி வீரமணி.
இவர் கடந்த 2011 முதல் 2020 வரை ஜோலார்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை உள்ளிட்ட அமைச்சர் பதவிகளை வகித்தார்.
இந்நிலையில் மேற்படி வீரமணி, அவரது பெயரிலும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் தான் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் பெயரிலும் தனது பதவி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது சம்பந்தமாக அவர் மீது கடந்த செப்டம்பர் மாதம் வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதன் தொடர்பாக கே.சி.வீரமணி மற்றும் அவரது உறவினர்கள் அவரது பங்குதாரர்கள் உள்ள நிறுவனங்கள் அவரது முன்னாள் அரசியல் நேர்முக உதவியாளர்கள் மற்றும் அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்கள் இருப்பிடம் உட்பட பெங்களூரூ,சென்னை ஆகிய இடங்களிலும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால் கடந்த செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி அன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் மணல், பணம் நகை அமெரிக்க டாலர், 9 கார்கள், ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் உட்பட கம்ப்யூட்டர்கள் ஆர்ட்டிஸ்டுகள் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் வெள்ளி பொருட்கள் தங்க நகைகள் வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவை கண்டறியப்பட்டது.
இவையாவும் வழக்கில் தொடர்புடையவை கைப்பற்றப்பட்டன.
மேலும் கே.சி. வீரமணி வீட்டில் வளாகத்தில் சுமார் 560 யூனிட் மணல் குவித்து வைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக ஊழல் தடுப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் அதே வளாகத்தில் 7 டிப்பர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் 7 டிப்பர் லாரிகள் மணல் கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரிப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தால் 7 லாரிகளும் வீரமணிக்கு சொந்தமான வளாகத்திலேயே பூட்டப்பட்டு கஸ்டடியில் வைக்கப்பட்டது.
விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா நேற்று திருப்பத்தூர் டி.எஸ்.பி.சாந்தலிங்கம் என்பவருக்கு உத்தரவிட்டதன் பேரில் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் வீரமணி வீட்டிற்கு சென்று கஸ்டடியில் வைக்கப்பட்டிருந்த 7 லாரிகளையும் அவரது பயன்பாட்டிற்கு விடுவித்தனர்.
அப்படின்ன்னா...?!