பாதிக்கப்பட்ட உதயாவை தோளில் சுமந்து காப்பாற்றிய பெண் இன்ஸ்பெக்டர்!!

  பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

  மழை பாதிப்பால் மரம் விழுந்ததில், அந்த மரத்தின் கீழ் ஒரு இளைஞர் சிக்கி சாய்ந்தார்.

 கிறிஸ்தவ கல்லரை ஒன்றில் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து டி.பி.காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு ஓடிவந்த பெண் இன்ஸ்பெக்டர் பாதிக்கப்பட்டவரை தூக்கி தன் தோளில் சுமந்து ஆட்டோவில் ஏற்றினார்.

 இதுகுறித்த விவரம் வருமாறு,

 சென்னை கே.6, டி.பி.சத்திரம் காவல் நிலையத்தின் சட்டம் ஓழுங்கு ஆய்வாளர் திருமதி ராஜேஸ்வரி.

 அவரது எல்லைபகுதியிலுள்ள கல்லரை தோட்டத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் அதில் ஒருவர் சிக்கி இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது.

  அதனைத் தொடர்ந்து உடனடியாக அங்கு விரைந்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரி மரக்கிளையில் அடியில் சிக்கியிருந்தவரை மீட்டார்.

  மீட்ட கையோடு நாடித்துடிப்பை பார்த்த அவர், ஏங்க இவருக்கு உயிர் இருக்குதுங்க என்று சொல்லி உடனடியாக அவரை தூக்கி தன் தோள் மீது சுமந்தபடி நடையும், ஓட்டமுமாக சென்று ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்.

  ஏம்பா சீக்கிரம் கூட்டிக்கிட்டு போங்க எப்படியும் காப்பாத்திடலாம், சீக்கிரம் சீக்கிரம் என்று ஆட்டோவை துரிதப்படுத்தி அனுப்பிவைத்தார்.

 அப்படி விரைந்து அனுப்பிவைக்கப்பட்ட இந்த இளைஞர் தற்போது கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிழைக்க வைக்கப்பட்டிருக்கிறார்.

 அந்த இளைஞரின் பெயர் உதயா. 

 தற்போது இன்ஸ்பெக்டரம்மாவுக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் அவரிடம் பேசினோம், விபத்தில் சிக்கிய உதயா என்பவர் கீழ்பாக்கம் கல்லரை தோட்டத்தில் குழி தோண்டும் தொழிலாளி ஆவார். மிகவும் கஷ்ட ஜீவன். நேற்று கூட கல்லரையில் வேலை செய்பவர்களுக்கு நாங்கள் உணவளித்தோம்.

 அப்படியிருக்க இன்றுஇந்த விபத்து நடந்தத்தை அறிந்து உடனடியாக நடவடிக்கையில் இறங்கினேன். அதன் மூலம் ஒரு உயிரை காப்பாற்ற முடிந்தது. தற்போது அந்த உதயகுமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தேறி வருகிறார் என்றார்.