எங்களை ஊடகங்கள் விமர்சனம் செய்கிறது! முன்னாள் அமைச்சர் வேலுமணி வேதனை!

எங்களை ஊடகங்கள் விமர்சனம் செய்கிறது! முன்னாள் அமைச்சர் வேலுமணி வேதனை!

  எஸ்.ஜான் மரிய ஜோசப்,

 எப்போதும், எங்களை ஊடகங்கள் விமர்சனம் செய்கிறது என முன்னாள் அமைச்சர் வேலுமணி வேதனை தெரிவித்தார்.

 கோவை மாவட்டம்,  அவினாசி ரோட்டில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தில் மாநகர், புறநகர் தெற்கு, வடக்கு ஆகிய ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 அதில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் எங்கள் ஆட்சியின் போதும் எங்களை விமர்ச்சித்தனர், தற்போதும் எங்களை விமர்சனம் செய்கின்றனர்.

 ஆனால், தி.மு.க.,ஆட்சியை விமர்ச்சிப்பது இல்லை.ஆனால் சன் டிவிக்கு அடுத்து இன்றைக்கு நிறைய டிவி மீடியாக்கள் வரக்காரணமாக இருந்தது அ.தி.மு.க., அரசு தான், அ.தி.மு.க., ஆட்சியில் தான் பத்திரிகையாளர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டது என்றார்.

   இந்நிலையில் அங்கு செய்தி சேகரிக்கும் பணிக்காக வந்திருந்த செய்தியாளர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை.

 ஆனால், தி.மு.க.வினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் தவறாமல் ஒரு பகுதியில் ஊடகத்தினருக்கு இருக்கை ஒதுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.